ஒரு இந்தியத்தாய்(தமிழரல்ல) தன் மகளுடன் பஸ்ஸில எங்கோ பயணித்துக்கொண்டிருக்கிறாள். அவளின் மடியில் அவள் மகள் நல்லா உறங்கிக்கொண்டிருக்க அந்த தாய் ஏதோ ஒரு ஹிந்தியில் எழுதிய துண்டுபிரசுரமாதிரியொன்றை வைத்து வாசித்துக்கொண்டே வந்தாள். அந்த பஸ்ஸில நானும் இவர்களுக்கு பக்கத்தில நின்றுகொண்டு பயணித்துகொண்டு இத்தாயை அவதானிச்சுக்கொண்டே வந்தேன். அவள் அந்த துண்டை வாசித்து முடிப்பதும் மற்றக்கையில் வைத்திருந்த முத்துமாலை மாதிரி ஒன்றிலுள்ள முத்தை தொடுவதும் பின்னர் மீண்டும் அதை வாசித்து முடித்து அந்த மாலையிலுள்ள அடுத்த முத்தை தொடுவதுமாக அவளின் செயற்பாடு இருந்திச்சு. இவற்றை பார்த்தவுடன் என் மனதுக்குள் பலவாறான மனவோட்டம் பல சிந்தனைகள். கேட்டுகொண்டிருக்கிற பாட்டின் தன்மையும் சேர்ந்தோ என்னவோ தெரியலை (காதுக்க பாட்டுப்பெட்டியையும் கொலுவிக்கொண்டே பயணிப்பது வழக்கம்) எதோ ஒரு இனம்புரியா உணர்வால் நெஞ்சு கனக்க அது கண்ணீராக கண்கள் கலங்கியது. நச்சுக்குண்டேவி கொல்லப்பட்ட ஒரு போராளியின் உடல் தோற்றத்தை பார்த்த அப்போராளியின் தாயுனுடைய வேதனை கதறல் மனக்கண்முன் வந்து போனது. இதே இந்திய தாயுனுடைய அரசுதானே ஈவிரக்கமின்றி விலங்கினங்கள் மீதே வீசத்தடைசெய்யப்பட்ட குண்டை ஏவி கொல்லுகிறது. ஜனநாயக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசென்றால் இந்த தாயின் பிரதிபலிப்பாகத்தானே அந்த அரசுமிருக்கவேண்டுமென மனம் எண்ணத்தோன்றினாலும் சீ அப்பிடி இருக்க வாய்ப்பே இல்லை என்றே அந்த தாயை பார்க்கும்போது தோன்றுகிறது. ஏனென்றால் அந்த தாய் முத்தை எண்ணி எண்ணி எதோ ராம நாமமெ உச்சரித்துகொண்டு பயணிக்கிறாள் என்று நினைக்கிறன் அப்படி ஒரு பயபக்தியுள்ள (மூடநம்பிக்கையாக இருந்தாலும்) ஒரு பாசமுள்ள தாயாகத்தான் எனக்கு தெரிகிறாள். அப்படிப்பட்டவளை எப்படி இந்திய அரசுடன் ஒப்பிடுவது? அப்படியென்றால் ஜனநாயகமென்பது போலியா என்றால் இலங்கை, இந்தியாவை பொறுத்தவரையில் அது பொருத்தமில்லாத ஒன்றுதான்.
ஜனநாயகமென்பது ஜனநாயக அரசென்பது உண்மையில் அந்த அந்த நாட்டுமக்களில் பெரும்பான்மையானோரின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கவேண்டும். இது ஓரளவுக்கு மேற்கத்திய நாடுகளில் வெற்றிகரமாகவே இருக்கிறது. ஏனென்றால் அந்த நாடுகளினுடைய மக்களில் பெரும்பாலனோரின் பொதுவறிவு, அரசியல் அறிவு, யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் தன்மைகளை பார்ப்போமென்றால் மிகவும் உயர்ந்த நிலையிலேயே உள்ளது. இத்திறன்கள் தமது உணர்வுகளை சரியாக பிரதிபலிக்கும் தமது சமூகத்தை வெற்றி நோக்கி வழிப்படுத்தும் தலைவர்கள் யார் என்று சுயமாக சிந்தித்து முடிவெடுக்க உதவுகின்றது. அதே நேரம் இவர்கள் நாட்டின் பொருளாதார நிலை ஒருவகையில் காரணமாகிறது. ஏனெனில் உயர் பொருளாதார நிலை காரணமாக இவர்களுக்கு உடனடித்தேவையென்று எதுவுமே இருக்கப்போவதில்லை (பெரும்பாலனோர் அடிப்படைதேவைகளை நிறைவுசெய்தவர்களாகவே இருக்கிறார்கள்). ஆகவே இவர்கள் சிந்திப்பதெல்லாம் தங்கள் எதிர்கால நன்மைகளையே. அதனால இவர்களால் நிதானமாக சிந்தித்து தங்களின் எதிர்காலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடியதாகவுள்ளது. இவர்களின் பொருளாதாரனிலை மிகவுயர்ந்ததாகவிருப்பதால், எந்தவொரு ஆசைவார்த்தைக்கும் எடுபட்டு தங்களின் உடனடித்தேவையை பூர்த்திசெய்யவேண்டிய அவசியம் கிடையாது. அதனாலதான் இங்கு ஜனநாயக ஆட்சியென்பது மிகவும் பொருத்தமாகவும் வெற்றிகரமாகவுமிருக்கிறது.
ஆனால் எங்களுடைய நாடுகளை பொறுத்தவரை இது வெற்றிகரமாக இல்லை என்றே கூறவேண்டும். இது ஒரு சில அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது. எங்கள் நாட்டுமக்களின் அறிவுத்திறனை பார்த்தால் பெரும்பாலனோருக்கு குறைவாகவே உள்ளது அதிலும் அரசியல் அறிவு என்னும்போது பூஜ்ஜியமாகத்தான் உள்ளது. இப்படியிருக்க இவர்கள் எப்படி சுயமா சிந்திப்பார்கள் தமக்கு நன்மை செய்யக்கூடிய தமது உணர்வுகளை பிரதிபலிக்ககூடிய தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். இவர்களிலும் பெரும்பாலனோர் இன்னமும் மூடநம்பிக்கைகளில் மூழ்கியோராய்தான் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு மேற்சொன்ன அம்மா ராம நாமத்தை 108 தரமோ 1008 தரமோ திரும்ப திரும்ப வாசிக்கின்றனேரம் எதோவொரு உலகநடப்பு பத்திரிகையை வாசித்துக்கொண்டுவந்திருந்தால் தன் அரசியலறிவை கூட்டியிருக்கலாம் ( தன்னுடைய நாட்டரசு என்ன செய்கிறது என்றாவது அறியலாம். நிச்சயமாக அந்த அம்மாவுக்கு இலங்கையில் போர் நடக்கிறது அதை தான் தேர்ந்தெடுத்த அரசுதான் உதவிசெய்து கொண்டு நடத்துகிறது அப்பாவிமக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை).
மேலும், எமது நாட்டுமக்களில் பெரும்பாலனோர் யாதார்த்தத்தை புர்ந்துகொள்ளதவர்களாகவே உள்ளனர். இதனால் எமது நாட்டின் பொருளாதார நிலமை என்ன….எடுத்தோம் கவுத்தோமென சும்மா உச்சத்துக்கு போய்விடமுடியாது என்பவற்றை புரிந்துகொள்ளாதவராகவே உள்ளனர் இதனால்தான் சும்மா ஒருதன் வந்து பசப்புவார்த்தைகளை அள்ளித்தந்து தான் அப்பிடிச்செய்வேன் இப்படிச்செய்வேனென்றால் உடனே அவனுக்கு தமது வாக்கைப்போட்டு தேர்ந்தெடுப்பார்கள். அதேநேரம் எம்மில் பெரும்பாலானோர் இன்னமும் அடிப்படைத்தேவைகளைக்கூட நிறைவுசெய்யவில்லை இவர்களுக்கு உடனடித்தேவைகள் பல, அப்படியானவர்கள் பணத்திற்கும் உடனடிசலுகைகளுக்கு எடுபட்டு போய்விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலமையில் நாம் எப்படி எமது நாடுகளில் மக்களினை பிரதிபலிக்கும் அரசுதானிருக்குமென எதிர்பார்க்க முடியும்?
என்னைப்பொறுத்தவரையில் இப்படிப்பட்ட தேசங்களுக்கு ஒரு கட்சி ஆட்சிமுறையே தற்போதைக்கு மிகவும் சிறப்பாக அமையும். ஆனால் ஜனநாயகமென்பது மிகவும் சிறந்ததொன்று எனவே இப்படியான ஒரு கட்சி ஆட்சிமுறையிலிருந்துகொண்டு ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுவதே சாலச்சிறந்ததாக இருக்கமுடியும். இவ்வாட்சி முறையிலிருந்துகொண்டு ஜனநாயகத்திற்கு தேவையான அடித்தளங்களை இடவேண்டும் அதாவது மக்களிடமிருந்து மூடநம்பிக்கைகளை களைந்து அவர்களுக்கு அரசியல் பாடம் புகட்டி மிகத்தெளிவுள்ளவர்கள் ஆக்கி அதன் பின் ஜனநாயக ஆட்சிமுறையை கொண்டுவர்வேண்டும்.
ஜனநாயகமென்பது ஜனநாயக அரசென்பது உண்மையில் அந்த அந்த நாட்டுமக்களில் பெரும்பான்மையானோரின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கவேண்டும். இது ஓரளவுக்கு மேற்கத்திய நாடுகளில் வெற்றிகரமாகவே இருக்கிறது. ஏனென்றால் அந்த நாடுகளினுடைய மக்களில் பெரும்பாலனோரின் பொதுவறிவு, அரசியல் அறிவு, யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் தன்மைகளை பார்ப்போமென்றால் மிகவும் உயர்ந்த நிலையிலேயே உள்ளது. இத்திறன்கள் தமது உணர்வுகளை சரியாக பிரதிபலிக்கும் தமது சமூகத்தை வெற்றி நோக்கி வழிப்படுத்தும் தலைவர்கள் யார் என்று சுயமாக சிந்தித்து முடிவெடுக்க உதவுகின்றது. அதே நேரம் இவர்கள் நாட்டின் பொருளாதார நிலை ஒருவகையில் காரணமாகிறது. ஏனெனில் உயர் பொருளாதார நிலை காரணமாக இவர்களுக்கு உடனடித்தேவையென்று எதுவுமே இருக்கப்போவதில்லை (பெரும்பாலனோர் அடிப்படைதேவைகளை நிறைவுசெய்தவர்களாகவே இருக்கிறார்கள்). ஆகவே இவர்கள் சிந்திப்பதெல்லாம் தங்கள் எதிர்கால நன்மைகளையே. அதனால இவர்களால் நிதானமாக சிந்தித்து தங்களின் எதிர்காலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடியதாகவுள்ளது. இவர்களின் பொருளாதாரனிலை மிகவுயர்ந்ததாகவிருப்பதால், எந்தவொரு ஆசைவார்த்தைக்கும் எடுபட்டு தங்களின் உடனடித்தேவையை பூர்த்திசெய்யவேண்டிய அவசியம் கிடையாது. அதனாலதான் இங்கு ஜனநாயக ஆட்சியென்பது மிகவும் பொருத்தமாகவும் வெற்றிகரமாகவுமிருக்கிறது.
ஆனால் எங்களுடைய நாடுகளை பொறுத்தவரை இது வெற்றிகரமாக இல்லை என்றே கூறவேண்டும். இது ஒரு சில அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது. எங்கள் நாட்டுமக்களின் அறிவுத்திறனை பார்த்தால் பெரும்பாலனோருக்கு குறைவாகவே உள்ளது அதிலும் அரசியல் அறிவு என்னும்போது பூஜ்ஜியமாகத்தான் உள்ளது. இப்படியிருக்க இவர்கள் எப்படி சுயமா சிந்திப்பார்கள் தமக்கு நன்மை செய்யக்கூடிய தமது உணர்வுகளை பிரதிபலிக்ககூடிய தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். இவர்களிலும் பெரும்பாலனோர் இன்னமும் மூடநம்பிக்கைகளில் மூழ்கியோராய்தான் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு மேற்சொன்ன அம்மா ராம நாமத்தை 108 தரமோ 1008 தரமோ திரும்ப திரும்ப வாசிக்கின்றனேரம் எதோவொரு உலகநடப்பு பத்திரிகையை வாசித்துக்கொண்டுவந்திருந்தால் தன் அரசியலறிவை கூட்டியிருக்கலாம் ( தன்னுடைய நாட்டரசு என்ன செய்கிறது என்றாவது அறியலாம். நிச்சயமாக அந்த அம்மாவுக்கு இலங்கையில் போர் நடக்கிறது அதை தான் தேர்ந்தெடுத்த அரசுதான் உதவிசெய்து கொண்டு நடத்துகிறது அப்பாவிமக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை).
மேலும், எமது நாட்டுமக்களில் பெரும்பாலனோர் யாதார்த்தத்தை புர்ந்துகொள்ளதவர்களாகவே உள்ளனர். இதனால் எமது நாட்டின் பொருளாதார நிலமை என்ன….எடுத்தோம் கவுத்தோமென சும்மா உச்சத்துக்கு போய்விடமுடியாது என்பவற்றை புரிந்துகொள்ளாதவராகவே உள்ளனர் இதனால்தான் சும்மா ஒருதன் வந்து பசப்புவார்த்தைகளை அள்ளித்தந்து தான் அப்பிடிச்செய்வேன் இப்படிச்செய்வேனென்றால் உடனே அவனுக்கு தமது வாக்கைப்போட்டு தேர்ந்தெடுப்பார்கள். அதேநேரம் எம்மில் பெரும்பாலானோர் இன்னமும் அடிப்படைத்தேவைகளைக்கூட நிறைவுசெய்யவில்லை இவர்களுக்கு உடனடித்தேவைகள் பல, அப்படியானவர்கள் பணத்திற்கும் உடனடிசலுகைகளுக்கு எடுபட்டு போய்விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலமையில் நாம் எப்படி எமது நாடுகளில் மக்களினை பிரதிபலிக்கும் அரசுதானிருக்குமென எதிர்பார்க்க முடியும்?
என்னைப்பொறுத்தவரையில் இப்படிப்பட்ட தேசங்களுக்கு ஒரு கட்சி ஆட்சிமுறையே தற்போதைக்கு மிகவும் சிறப்பாக அமையும். ஆனால் ஜனநாயகமென்பது மிகவும் சிறந்ததொன்று எனவே இப்படியான ஒரு கட்சி ஆட்சிமுறையிலிருந்துகொண்டு ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுவதே சாலச்சிறந்ததாக இருக்கமுடியும். இவ்வாட்சி முறையிலிருந்துகொண்டு ஜனநாயகத்திற்கு தேவையான அடித்தளங்களை இடவேண்டும் அதாவது மக்களிடமிருந்து மூடநம்பிக்கைகளை களைந்து அவர்களுக்கு அரசியல் பாடம் புகட்டி மிகத்தெளிவுள்ளவர்கள் ஆக்கி அதன் பின் ஜனநாயக ஆட்சிமுறையை கொண்டுவர்வேண்டும்.


