இன்றும் வழமையைப்போலவே பிரார்தனையுடன் எழும்பினேன். போராளிகளிற்கு வெற்றிவர வேண்டும் நல்ல செய்தி ஏதாவது வரவேண்டும் எதுவும் துக்கம் தரும் செய்திவந்திடக்கூடாது என்ற பிரார்தனை. பெரும்பாலான தமிழரின் வேண்டுதல் இதுவாகத்தான் இருக்கும். ஆனால் இறைவன் தான் இன்னமும் தூங்கிக்கொண்டே இருக்கிறான். என்று விழிப்பான் இதுதான் எமது ஏக்கம். இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை. சற்று தாமதித்தாலும் தர்மம் வெல்லும் உண்மை என்றும் தோற்றதில்லை.
இதற்கிடையே மகிந்தவின் 48 மணிநேர போர்நிறுத்த அறிவிப்பு பெரும் விசனத்தை கொண்டுவருகிறது. போர்நிறுத்தத்தால் இல்லை அது அறிவிப்பு செய்ததற்கு கூறப்பட்ட காரணம் அதற்கு பின்னால் உள்ள சதித்திட்டம் இவற்றால்தான் வெறுப்பாகவே இருக்கு. போர்நிறுத்தமென்பது ஒரு நல்ல விஷயமே 1 மணிநேர போர்நிறுத்தம் கூட அந்த மக்களுக்கு ஒரு ஆறுதலே ஏனெனில் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக நடக்கும் போரில் 1 நிமிடம்கூட ஓய்வு கொடுக்கவில்லை. அப்படிப்பார்க்கையில் இது ஒரு ஆறுதலே. ஆனால் இந்த 48 மணிநேரம் செய்து என்ன பிரயோசனமென்றால் ஒன்றுமே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். இந்த 48 மணிநேரத்தில் அம்மக்கள் என்ன செய்யமுடியும். தம்முறவுகள் யார் யார் மடிந்தார்கள் யார் உயிருடன் உள்ளார்கள் என்று கண்க்கு பார்க்கவே முடியும். தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கத்தான் முடியுமா அப்பிடி வாங்குவதற்கு பொருட்கள்தான் உள்ளனவா? அல்லது வாங்கினால்தான் அதை வைப்பதற்கு வீடிருக்கிறதா? அப்பிடி வாங்குவதற்கு பணம்தான் உள்ளதா? சரி உயிரையாவது காப்பதற்கு பாதுகாப்பான இடமென்று எங்கு செல்வது அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்திலிருந்து. அல்லது அரசின் நலன்புரிமுகாமென அழைக்கப்படும் வதைமுகாமுக்கு செல்வதா? அப்பிடி அங்குதான் போவதென்றால் என்றோ அந்த மக்கள் போயிருப்பார்களே.
இப்படி அந்த மக்கள் அல்லற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் அந்த கொடும் பயங்கரவாதி மகிந்த சொல்லுகிறான் அந்த மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக 48 மணிநேர போர்நிறுத்தம் செய்கிறாரம். எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்கள் அவனுக்கு. இதிலிருந்தே தெரிகிறது அவனுக்குள் எவ்வளவு வக்கிரமும் இனவாதமும் கொட்டிக்கிடக்கென்று.
இந்த போர்நிறுத்தத்திற்கு பின்னால் இருக்கும் சதித்திட்டங்களை ஊகிக்கும்போது பயங்கரமாக உள்ளது. ஒருவேளை இந்த போர்நிறுத்த நாடகம் முடிந்த பிறகு வெளியேறாத மக்கள் எல்லோரும் புலிகளாக மாறிவிட்டார்களென்று அறிவித்துவிட்டு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து அழிக்க நினைப்பார்களோ என எண்ணும்போது என்னவோ செய்கிறது (கடவுளே அப்படியேதேனும் நடந்துவிடக்கூடாது) அதற்குள் இந்த உலகம் கண்ணைத்திறக்கவேண்டும். அது புலம்பெயர்ந்த மக்களின் கைகளிலேயே உள்ளது அதற்காக நாம் எல்லோரும் வீச்சோடு படுவேகமாக எம்முள் உள்ள வேற்றுமைகளை மறந்து இப்போ உள்ளதைவிட கடுமையாக போராடவேண்டும். மனம் தளராது சோர்வடைய விடாமல் எம்போராட்டத்தை தொடரவேண்டும். இந்த போர்நிறுத்தத்தை காரணம்காட்டியே பல நாடுகள் நம் போராட்டத்தை தட்டிக்கழிக்கக்கூடும் நசுக்கக்கூட முற்படும் எதற்கும் அசைந்து கொடுக்காது வலிமையாக நின்று அவர்களின் மனச்சாட்சியை தொடவேண்டும். இதைவிட்டால் எமக்கு வேறு சந்தர்ப்பமில்லை எமது நிம்மதியான வாழ்விற்கு ஆகவே எல்லோரும் ஒற்றுமையாக உரத்து குரல் கொடுப்போம்
இதற்கிடையே மகிந்தவின் 48 மணிநேர போர்நிறுத்த அறிவிப்பு பெரும் விசனத்தை கொண்டுவருகிறது. போர்நிறுத்தத்தால் இல்லை அது அறிவிப்பு செய்ததற்கு கூறப்பட்ட காரணம் அதற்கு பின்னால் உள்ள சதித்திட்டம் இவற்றால்தான் வெறுப்பாகவே இருக்கு. போர்நிறுத்தமென்பது ஒரு நல்ல விஷயமே 1 மணிநேர போர்நிறுத்தம் கூட அந்த மக்களுக்கு ஒரு ஆறுதலே ஏனெனில் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக நடக்கும் போரில் 1 நிமிடம்கூட ஓய்வு கொடுக்கவில்லை. அப்படிப்பார்க்கையில் இது ஒரு ஆறுதலே. ஆனால் இந்த 48 மணிநேரம் செய்து என்ன பிரயோசனமென்றால் ஒன்றுமே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். இந்த 48 மணிநேரத்தில் அம்மக்கள் என்ன செய்யமுடியும். தம்முறவுகள் யார் யார் மடிந்தார்கள் யார் உயிருடன் உள்ளார்கள் என்று கண்க்கு பார்க்கவே முடியும். தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கத்தான் முடியுமா அப்பிடி வாங்குவதற்கு பொருட்கள்தான் உள்ளனவா? அல்லது வாங்கினால்தான் அதை வைப்பதற்கு வீடிருக்கிறதா? அப்பிடி வாங்குவதற்கு பணம்தான் உள்ளதா? சரி உயிரையாவது காப்பதற்கு பாதுகாப்பான இடமென்று எங்கு செல்வது அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்திலிருந்து. அல்லது அரசின் நலன்புரிமுகாமென அழைக்கப்படும் வதைமுகாமுக்கு செல்வதா? அப்பிடி அங்குதான் போவதென்றால் என்றோ அந்த மக்கள் போயிருப்பார்களே.
இப்படி அந்த மக்கள் அல்லற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் அந்த கொடும் பயங்கரவாதி மகிந்த சொல்லுகிறான் அந்த மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக 48 மணிநேர போர்நிறுத்தம் செய்கிறாரம். எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்கள் அவனுக்கு. இதிலிருந்தே தெரிகிறது அவனுக்குள் எவ்வளவு வக்கிரமும் இனவாதமும் கொட்டிக்கிடக்கென்று.
இந்த போர்நிறுத்தத்திற்கு பின்னால் இருக்கும் சதித்திட்டங்களை ஊகிக்கும்போது பயங்கரமாக உள்ளது. ஒருவேளை இந்த போர்நிறுத்த நாடகம் முடிந்த பிறகு வெளியேறாத மக்கள் எல்லோரும் புலிகளாக மாறிவிட்டார்களென்று அறிவித்துவிட்டு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து அழிக்க நினைப்பார்களோ என எண்ணும்போது என்னவோ செய்கிறது (கடவுளே அப்படியேதேனும் நடந்துவிடக்கூடாது) அதற்குள் இந்த உலகம் கண்ணைத்திறக்கவேண்டும். அது புலம்பெயர்ந்த மக்களின் கைகளிலேயே உள்ளது அதற்காக நாம் எல்லோரும் வீச்சோடு படுவேகமாக எம்முள் உள்ள வேற்றுமைகளை மறந்து இப்போ உள்ளதைவிட கடுமையாக போராடவேண்டும். மனம் தளராது சோர்வடைய விடாமல் எம்போராட்டத்தை தொடரவேண்டும். இந்த போர்நிறுத்தத்தை காரணம்காட்டியே பல நாடுகள் நம் போராட்டத்தை தட்டிக்கழிக்கக்கூடும் நசுக்கக்கூட முற்படும் எதற்கும் அசைந்து கொடுக்காது வலிமையாக நின்று அவர்களின் மனச்சாட்சியை தொடவேண்டும். இதைவிட்டால் எமக்கு வேறு சந்தர்ப்பமில்லை எமது நிம்மதியான வாழ்விற்கு ஆகவே எல்லோரும் ஒற்றுமையாக உரத்து குரல் கொடுப்போம்
"எமக்கு தேவையில்லை தற்காலிக போர்நிறுத்தம் எமக்கு வேண்டும் நிரந்தர போர்நிறுத்தம்"
"எமக்கு தேவை நிரந்தர தீர்வு நிரந்தர நிம்மதி அது தமிழீழமே"
"எமது ஏக பிரநிதிகள் விடுதலைப்புலிகளே எமது தலைவர் பிரபாகரனே"
"எமக்கு தேவை நிரந்தர தீர்வு நிரந்தர நிம்மதி அது தமிழீழமே"
"எமது ஏக பிரநிதிகள் விடுதலைப்புலிகளே எமது தலைவர் பிரபாகரனே"



0 மறுமொழிகள்:
Post a Comment