இப்பவெல்லாம் எனக்கு எதோ வியாழக்கிழமை வந்தாலே ஒரு ஒரு கரி நாள்மாதிரியப்பா. எல்லாம் இந்த மத்தியான சாப்பாடுதான். இந்த மதிய உணவுதான் உலகத்திலயே மிக மிக கேவலமாக தாயாரிக்கப்பட்ட உணவா இருக்குமோ என்ற சந்தேகம் கூட எனக்கு இதை சாப்பிடும்போது வந்து போகும். பத்து நாள் சாப்பிடாமல் கிடந்தவனிட்டை கொண்டே குடுத்தால் கூட கெட்டவார்த்தையால திட்டிட்டு தூக்கியெறிவான் என்றுதான் நினைக்கிறன். அப்பிடி கேவலமாயிருக்கும் அது மோந்துபார்க்கிறதுக்கு முன்னமேயென்றால் மோந்து பார்த்து சாப்பிட்டால் எப்படியிருக்கும் நான் அந்த சாதனையை செய்திருக்கிறன் அச்சாதனையை இறுதியில் சொல்லுறன் (எப்படித்தான் இப்படியெல்லாம் செய்யிறாங்களோ தெரியாது இதுக்கெல்லாம் தனிப்பிறப்பெடுக்கவேணும்). இதுக்கு முந்தி எங்கட flashback ஐ பார்த்திட்டு இப்ப நடக்கிறதை பார்த்தால் சிரிப்புத்தான் வரும்
முந்தியெல்லாம் பாருங்க நாங்கள் எல்லாம் பெரிய highly people. ஏனெண்டு கேட்கிறிங்களா? உப்பு எப்பன் குறைஞ்சு கூடினாலே எத்தனை பெரிய கலவரம் யுத்தம் என்றெல்லாம் அம்மாவோடு செய்வம். எத்தினை பேச்சு அம்மாவுக்கு இவ்வளவு காலம் சமைக்கிறிங்கள் இன்னும் உப்பு சரியா போடத்தெரியாது (எதோ இவரைவிட்டால் எல்லாம் perfect ஆ செய்வரில்லே) என்று அன்று ஒரு நாள் குறைஞ்சதுக்கு எதோ ஒவ்வொரு நாளும் செய்யிறமாதிரி பேச்சு, அந்த சாப்பாட்டை சாப்பிடமாட்டன் என்று உண்ணவிரதம் வேற இருப்பம் அம்மா இதெல்லாத்தையும் பார்த்துட்டு சரி நான் திருப்பி செய்துதாரன் என்று எழும்பிபோகத்தான் எங்களுக்கு திருப்தி வந்து எதோ எங்கட போராட்டத்தில வெற்றிபெற்றாச்சு என்ற பெருமையில கொலர தூக்கிவிடாத குறையா போய் அம்மாட்டை சரி நான் இதையே சாப்பிடிறன் என்று பெரிய தியாகம் செய்து சாப்பிடுவது போல சாப்பிடுவம் (ஆனால் இப்ப நிலமையை பாருங்க). இப்படி பந்தா பண்ணி சாப்பிட்டனாங்கள் இப்ப இப்பிடி அழுதழுது சாப்பிடவேண்டிக்கிடக்கு. இனி எப்பதான் அந்தகாலம் வருமோ……..வயது திரும்பி மற்றவழத்திற்கு ஓடாதா என்றுகூட சிலவேளைகளில் யோசிப்பதுண்டு.
சரி சாப்பாட்டை சாப்பிட்டகதைக்கு வருவம். எனக்கு முதலிலேயே ஒரு idea சாப்பாட்டை திறந்து பார்க்காமல் வெளில எங்கேயாவது போய் சாப்பிடுவமென்று (தெரியும்தானே 2 வருஷமா வியாழனில் எப்பிடி சாப்பாடென்று). ஆனால் அதுக்கும்போய் எங்கட office ல இருந்த manager ஒருதன் ஆப்பு வைச்சுவிட்டான். என்னென்றால் நானும் வெளில போய் சாப்பிட idea போட்டு, எங்கட office ல இருக்கிறவே சாப்பிட முதலில போகட்டுமென்று பார்த்துக்கொண்டிருந்தேன் ஏனென்றால் அவேக்கு முதல் வெளிக்கிட்டனென்றால் தங்களோடுவந்து சாப்பிடுமாறு வற்புறுத்திக்கொண்டிருப்பார்கள். அவங்களோடு போய் சாப்பிடிறதில என்ன பிரச்சனையென்றால் அந்த chinese சாப்பாடுதான் (இதைப்பற்றி பெரிய சரிதம் எழுதலாம்). அதை சாப்பிடுவதை காட்டிலும் பட்டினிகிடக்கலாம். அந்த manager என்ன செய்தானென்றால் போகும்போது என்னையும் சாப்பிட வா என்று ஒரே அடம்பிடிக்க வெளிக்கிட்டுட்டான் நானும் அவனிடமிருந்து தப்புவதற்காக நான் கொண்டந்த சாப்பாட்டை திறந்து சாப்பிடத்தொடங்கிவிட்டேன். இப்பதான் என்ர கஸ்டகாலம் ஆரம்பமாச்சு. என்னவா இருந்தலென்ன மூக்கப்பிடிச்சுக்கொண்டு மருந்துகுடிக்கிற மாதிரி சாப்பிடிறதுதான் என்று சபதமெடுத்து சாப்பிடதொடங்கினேன். சரியென்று ஒரு பிடியை வாய்க்குள் போட்டு மெல்லத்தொடங்கினால், வாய்க்குள் ஒரே கரிக்கட்டிமாதிரி கிடந்துச்சு என்னடா இது என் சபதத்துக்கு ஆப்புவைக்குது என்று கறியை குனிஞ்சுபார்த்தால் அதில ஒரு கறி கரியாகிக்கிடந்திச்சு அது என்ன கறியென்று ஆராய்ந்துபார்த்தில் அது கோபா வறையென்று அந்த சமையல்கார சீமான் செய்திருக்கிறார் என்று விளங்கிச்சு. அப்பதான் காலையில வீடெல்லாம் ஒரே புகை அதாலதான் தான் மூச்சுமுட்டி விழித்துகொண்டதா hall க்க படுக்கிற நண்பனொருவன் சொன்னது ஞாபகத்துகு வந்தது. ஓ……அந்த விளைவுதான் இந்த கரிக்கட்டி கறி என்று விளங்கிச்சு. அப்பதான் யோசிச்சன் அவங்களோடபோயாவது ஏதாவது சீனா சாப்பாடாவது சாப்பிட்டிருக்கலாமென்று என்ன செய்ய எல்லாம் விதியென்று அடுத்த வாய் சோற்றை சாப்பிடத்தொடங்கினேன் ம்ம்ம் முடியல. இதுக்குமேல சாப்பிட்டனென்றால் உலகத்தில ஆக கேவலமான சாப்பாட்டை 2 வாய்க்கு மேல் சாப்பிட்ட கின்னஸ் சாதனை வந்திடுமென்ற பயத்தில சாப்பிடாமல் அப்பிடியே கொண்டுபோய் கொட்டிட்டுவந்து கம் என்று வந்திருந்து இதை எழுதுகிறேன் சாப்பிடபோனாக்கள் திரும்பி office வரும்வரைக்கும். இதுதான் என் சாப்பாட்டுக்கதை………BYE.
முந்தியெல்லாம் பாருங்க நாங்கள் எல்லாம் பெரிய highly people. ஏனெண்டு கேட்கிறிங்களா? உப்பு எப்பன் குறைஞ்சு கூடினாலே எத்தனை பெரிய கலவரம் யுத்தம் என்றெல்லாம் அம்மாவோடு செய்வம். எத்தினை பேச்சு அம்மாவுக்கு இவ்வளவு காலம் சமைக்கிறிங்கள் இன்னும் உப்பு சரியா போடத்தெரியாது (எதோ இவரைவிட்டால் எல்லாம் perfect ஆ செய்வரில்லே) என்று அன்று ஒரு நாள் குறைஞ்சதுக்கு எதோ ஒவ்வொரு நாளும் செய்யிறமாதிரி பேச்சு, அந்த சாப்பாட்டை சாப்பிடமாட்டன் என்று உண்ணவிரதம் வேற இருப்பம் அம்மா இதெல்லாத்தையும் பார்த்துட்டு சரி நான் திருப்பி செய்துதாரன் என்று எழும்பிபோகத்தான் எங்களுக்கு திருப்தி வந்து எதோ எங்கட போராட்டத்தில வெற்றிபெற்றாச்சு என்ற பெருமையில கொலர தூக்கிவிடாத குறையா போய் அம்மாட்டை சரி நான் இதையே சாப்பிடிறன் என்று பெரிய தியாகம் செய்து சாப்பிடுவது போல சாப்பிடுவம் (ஆனால் இப்ப நிலமையை பாருங்க). இப்படி பந்தா பண்ணி சாப்பிட்டனாங்கள் இப்ப இப்பிடி அழுதழுது சாப்பிடவேண்டிக்கிடக்கு. இனி எப்பதான் அந்தகாலம் வருமோ……..வயது திரும்பி மற்றவழத்திற்கு ஓடாதா என்றுகூட சிலவேளைகளில் யோசிப்பதுண்டு.
சரி சாப்பாட்டை சாப்பிட்டகதைக்கு வருவம். எனக்கு முதலிலேயே ஒரு idea சாப்பாட்டை திறந்து பார்க்காமல் வெளில எங்கேயாவது போய் சாப்பிடுவமென்று (தெரியும்தானே 2 வருஷமா வியாழனில் எப்பிடி சாப்பாடென்று). ஆனால் அதுக்கும்போய் எங்கட office ல இருந்த manager ஒருதன் ஆப்பு வைச்சுவிட்டான். என்னென்றால் நானும் வெளில போய் சாப்பிட idea போட்டு, எங்கட office ல இருக்கிறவே சாப்பிட முதலில போகட்டுமென்று பார்த்துக்கொண்டிருந்தேன் ஏனென்றால் அவேக்கு முதல் வெளிக்கிட்டனென்றால் தங்களோடுவந்து சாப்பிடுமாறு வற்புறுத்திக்கொண்டிருப்பார்கள். அவங்களோடு போய் சாப்பிடிறதில என்ன பிரச்சனையென்றால் அந்த chinese சாப்பாடுதான் (இதைப்பற்றி பெரிய சரிதம் எழுதலாம்). அதை சாப்பிடுவதை காட்டிலும் பட்டினிகிடக்கலாம். அந்த manager என்ன செய்தானென்றால் போகும்போது என்னையும் சாப்பிட வா என்று ஒரே அடம்பிடிக்க வெளிக்கிட்டுட்டான் நானும் அவனிடமிருந்து தப்புவதற்காக நான் கொண்டந்த சாப்பாட்டை திறந்து சாப்பிடத்தொடங்கிவிட்டேன். இப்பதான் என்ர கஸ்டகாலம் ஆரம்பமாச்சு. என்னவா இருந்தலென்ன மூக்கப்பிடிச்சுக்கொண்டு மருந்துகுடிக்கிற மாதிரி சாப்பிடிறதுதான் என்று சபதமெடுத்து சாப்பிடதொடங்கினேன். சரியென்று ஒரு பிடியை வாய்க்குள் போட்டு மெல்லத்தொடங்கினால், வாய்க்குள் ஒரே கரிக்கட்டிமாதிரி கிடந்துச்சு என்னடா இது என் சபதத்துக்கு ஆப்புவைக்குது என்று கறியை குனிஞ்சுபார்த்தால் அதில ஒரு கறி கரியாகிக்கிடந்திச்சு அது என்ன கறியென்று ஆராய்ந்துபார்த்தில் அது கோபா வறையென்று அந்த சமையல்கார சீமான் செய்திருக்கிறார் என்று விளங்கிச்சு. அப்பதான் காலையில வீடெல்லாம் ஒரே புகை அதாலதான் தான் மூச்சுமுட்டி விழித்துகொண்டதா hall க்க படுக்கிற நண்பனொருவன் சொன்னது ஞாபகத்துகு வந்தது. ஓ……அந்த விளைவுதான் இந்த கரிக்கட்டி கறி என்று விளங்கிச்சு. அப்பதான் யோசிச்சன் அவங்களோடபோயாவது ஏதாவது சீனா சாப்பாடாவது சாப்பிட்டிருக்கலாமென்று என்ன செய்ய எல்லாம் விதியென்று அடுத்த வாய் சோற்றை சாப்பிடத்தொடங்கினேன் ம்ம்ம் முடியல. இதுக்குமேல சாப்பிட்டனென்றால் உலகத்தில ஆக கேவலமான சாப்பாட்டை 2 வாய்க்கு மேல் சாப்பிட்ட கின்னஸ் சாதனை வந்திடுமென்ற பயத்தில சாப்பிடாமல் அப்பிடியே கொண்டுபோய் கொட்டிட்டுவந்து கம் என்று வந்திருந்து இதை எழுதுகிறேன் சாப்பிடபோனாக்கள் திரும்பி office வரும்வரைக்கும். இதுதான் என் சாப்பாட்டுக்கதை………BYE.



0 மறுமொழிகள்:
Post a Comment