Friday, May 22, 2009

பிரபாகரன் விரைவில் வருவான்: அருட்தந்தை ஜெகத்கஸ்பர்

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்

ஆயினும் போரது நீறும், புலி

ஆடும் கொடி நிலம் ஆறும்.

பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்

பாசறை ஆயிரம் தோன்றும், கருப்

பைகளும் ஆயுதம் ஏந்தும்.

மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை

மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த

சிங்கள கூட்டங்கள் ஓடும்.

-இணையத்தில்இன்று காலை நான் கண்ட கவிதை இது. எழுதியவர் புதுவை இரத்தினதுரையாக இருக்க லாம். படித்துச் சிலிர்த்து நின்ற வேளை தொலைபேசி அழைப்பொன்று வந் தது. கடந்த நான்கு நாட்களாய் தொலைபேசிய அந்த முக்கியமான வரை தொடர்பு கொள்ள நூறு முறையேனும் முயன்று மனக் களைப்புற்றிருந்தேன். களநிலை பற்றின பொய்யும் புனைவுமிலா உண்மையை தரவல்ல நிலையில் உள்ளவர் அவர். வானகத்தின் தூதுவன் நேரிடை வந்தது போல வந்தது அந்த அழைப்பு. அவர் சொன்னார்: ""கவலை ஏதும் வேண்டாம். தலைவர் பாதுகாப்பாக உள்ளார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உறுதி செய்யப்பட்டபின் உலகோடு அவர் பேசு வார்''. தமிழீழ எல்லைகளின் காவலன் நல் லூர் முருகனும் எனது லூர்து மாதாவும் துணையிருந்தார்கள். படித்த கவிதை சந்தம் கட்டி என் மனதில் பாடலாய் துள்ள லாயிற்று. "பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப்பை களும் ஆயுதம் ஏந்தும்'.

எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் இதே புதுவை ரத்தினதுரை எழுதிய கவிதையின் மறக்க முடியாத சில வரிகள் நினைவு வெளியில் கை வீசி நடந்தன.

""வா பகையே... வா...

வந்தெம் நெஞ்சேறி மிதி.

பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.

வேரைத் தழித்து வீழ்த்து.

ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்

நினைவில் கொள்!''

புதுவை ரத்தினதுரையின் கவிதைகள்பால் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது 1995-ம் ஆண்டு. அதிபர் சந்திரிகா குமார துங்கே யுத்த வெறி கொண்டு முப்படைகளையும் அவிழ்த்து விட்டு யாழ்ப்பாணத்தை சிறைப்படுத்திய காலம். யாழ்ப்பாணத்தில் சிங்க முத்திரை பொறித்த சிங்களக் கொடியை ஏற்ற அன்றைய ராணுவ அமைச்சர் அனுருத்த ரத்வத்தே வந்தார். அக்கொடியை சுமந்து வந்தது யாழ்ப்பாணத்து மேயராக இருந்த தமிழர். பெயர் மறந்துவிட்டேன். வடதமிழீழத்து இதயமாம் யாழ்ப்பாணத்திற்கு சிங்கக் கொடி சுமந்து வந்த மேயர் மீது புதுவைக்குச் சீற்றம். நீண்ட கவிதையொன்று எழுதியிருந்தார். இரண்டு வரிகள் மட்டும் அடித்த ஆணிபோல் நினைவில் பதிந்து நிற்கின்றன.

""மேயர் அவர்களே

நீவிர் சிங்கக் கொடியை சுமந்து வந்தபோது

மின்னும் ஜரிகை கரை கொண்ட

பட்டு வேஷ்டி கட்டி வந்ததாய் அறிந்தேன்.

கக்கூஸ் வாளிக்கு தங்க முலாம் பூசுவதில்லையே?!

-அறுபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழ் உயிர்களை கொன்றழித்து, இரண்டரை லட்சம் பேரை சொந்த மண்ணில் அகதிகளாக்கி, முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தை நீசத்தனமாய் நிர்மூலம் செய்த ராஜபக்சே கும்பலுக்கு வன்னிப்பரப்பில் சிங் கக் கொடி தூக்க நாக்கை தொங்கவிட்டுக் காத்திருக்கும் ஆனந்தசங்கரி வகையறாக்கள் ஒரு கணம் நினைவுக்கு வந்தபோது புதுவையின் கவிதையும் உடன் சேர்ந்து வந்தது. ""கக்கூஸ் வாளிகளுக்கு தங்க முலாம் பூசுவதில்லையே...?! ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்த சங்கரிகளே இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட் டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.

கடைசி நாளில் -அதாவது கடந்த சனிக்கிழமை நடந்தது இதுதான். வேலுப்பிள்ளை பிரபாகரனும் எதிர்காலத்தில் போராட்டத்தையும் இயக்கத்தையும் மீள் கட்டமைப்பு செய்வதற்கு முக்கியமானவர்களான சில தளபதியர்களும் பாதுகாப்பாக அகன்றபின் களத்தின் இறுக்கம் தணிகிறது. கை ஒடிந்து, கால் முறிந்து, உடலின் சில பகுதிகள் சிதைந்து ரத்தம் வழிந்தே பாதி செத்துப் போன சுமார் 12,000 அப்பாவி மக்களையும், அவ்வாறே காயமுற்ற சுமார் 3,000 போராளிகளையும் எப்படியேனும் அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவினை விடுதலைப்புலிகள் எடுக்கி றார்கள். கடற் புலித் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டு காயமுற்ற மக்களையேனும் பாதுகாப்பாய் வெளியேற்ற 48 மணி நேர சண்டை நிறுத்தம் வேண்டுகிறார்.

மதுரை தமிழரோ உணர்வாளர் சுப.வீ. என்ற சுப.வீரபாண்டியன் அவர்களை மன்றாட சுப.வீ. அவர் கள் கனிமொழி அவர்களின் கருணையை கேட்கிறார். கனிமொழி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஒருவரோடு பேச "அதிகாரப்பூர்வமற்ற', ஆனால் யதார்த்த மான முடிவொன்று தரப்பட்டது. ""விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாபன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்ற முடிவினை எழுத்துப் பூர்வமாய் தொலைநகல் (எஆல) வழி உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவையெல்லாம் இந்தியா பார்த்துக் கொள்ளும்''. இரவு 10 மணி ஆயிற்று. இந்தக் கட்டத்தில் நானும் இணைந்தேன். லண்டனிலுள்ள எனது நண்பர்கள் மூலம் செல்வராஜா பத்மநாபன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட அவரும் மின்னல் வேகத்தில் இயங்கினார். ""இந்தியாவிடமே நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். அது சாத்தியமில்லையென்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்'' என்ற முடிவை விடுதலைப் புலிகள் இரவு 11.50-க்குத் தெரிவித்தார்கள். கனிமொழி தயக்கத்துடன் காங்கிரஸ் பெரியவரை தொடர்பு கொள்ள அவரும் விழித்தே இருந்தார். ""கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது'' என்கிறார் அப்பெரியவர்.

மக்களை காக்க வேண்டி இலங்கை ராணு வத்திடமே ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவினை சனி நள்ளிரவு புலிகள் எடுத்தார்கள். ஞாயிறு காலை கொழும்பு இந்திய தூத ரகத்தின் உதவியுடன் இலங்கைத் தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலம் ராஜபக்சேவோடு பேச்சுவார்த்தை கள் நடத்த முடிவொன்று ஏற்படுகிறது. "முல் லைத்தீவு களத்தில் நிற்கும் புலிகளின் தளபதிகள் வெள் ளைக்கொடி பிடித் துக் கொண்டு இலங் கை தளபதிகளிடம் வரட்டும். ஆயுதங் களை ஒப்படைப்பது, காயமுற்றோரை அப்புறப்படுத்துவது தொடர்பான நடைமுறை ஒழுங்குகளை அவர்களே கலந்து பேசி முடிவு செய்யட்டும்' என்பதாக அந்த ஏற்பாடு.

இம்முடிவினை ராஜபக்சே அலுவலகம் ராணுவத் தலைமைக்கும், முல்லைத் தீவு கட்டளைத் தளபதிகளுக்கும் அறிவிக்கிறது. இந்த ஏற்பாடுகள் முடியவே ஞாயிறு இரவாகி விடுகிறது.

ராஜபக்சேவுடன் நடந்த விவாதங்களையும் முடிவுகளையும் கஜன் என்ற கஜேந்திரன் பொன்னம்பலம்... செல்வராஜா பத்மநாபனுக்குத் தெரிவிக்க முல்லைத்தீவு களத்தில் நின்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனுடன் இவற்றை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு விவாதிக்கிறார் பத்மநாபன். யுத்தம் 500 மீட்டர் அருகில் வந்த போதும் கூட உலகோடு உரையாடும் செயற் கோள் வசதிகளை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு ராணுவ அரசியல் இயக்கமாக எத்துணை ஆழமாக வளர்ந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாகத் தெரிந்தது. விடிந்ததும் நடேசன், சிறப்புத் தளபதி ரமேஷ் -இவர் முன்பு கருணாவின் துணை தளபதியாக இருந்தவர், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் மூவரும் வெள்ளைக் கொடி ஏந்தி சிங்களத் தளபதியர்களை சந்திக்கச் செல்வ தாய் ஏற்பாடு.

வெடிபொருள் புகை கவிந்த முல்லைத் தீவு பரப்பு விடிந்தது. வெள்ளைக் கொடி ஏந்தி மூவரும் நடந்தார்கள். சிங்களத் தளபதியர்களின் கூடாரம் அருகே வந்தார்கள். ஏன், என்னவென்ற பேச்சின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர்களைச் சுட்டுக் கொல்லும் உத்தரவை ராஜபக்சேவின் சகோதரனும் ராணுவ அமைச்சருமான கோத்தபய்யா ராஜபக்சே பிறப்பித்திருந்த சதி.

வெள்ளைக் கொடியேந்தி சரணடையவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ வருகிறவர்களுக்குத் தீங்கிழைப்பது யுத்தக் குற்றம். அனைத்துலக சட்டதிட்டங்கள் இதனை கடுமையாக வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்கள இனவெறி பிடித்தாடும் கோத்தபய்யாவை பொறுத்தவரை தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது. நடேசனும், புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்தக் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் கோத்தபய்யாவின் கணக்கு. முக்கிய செய்தி என்னவென்றால் இந்தியா சொல்வதையோ, அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை என்பதுதான்.

கொடுமை அத்தோடு முடியவில்லை காயமுற்று பாதி உயிரோடு முனகிக் கிடந்த பத்தாயிரத்திற்கும் மேலான அப்பாவி மக்களை புல்டோசர்கள், செயின் புளக்-கள் ஏற்றிக் கொன்றுவிட்டு ஆதாரங் கள் ஏதுமின்றி அதிநவீன ரசாயனக் கலவைகள் ஊற்றி எரித்திருக்கிறார்கள். அவ்வாறே காய முற்றிருந்த சுமார் 3,000 போராளிகளையும் கரு ணை இரக்கமின்றி சுட்டுக் கொன்று வெறி தீர்த்திருக்கிறார்கள். வேறெதற் கும் இல்லையெனினும் கோத்தபய்யாவிற்கு நீதி சொல்லவேனும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவான், நிச்சயமாய் வருவான்.

மரணத்தின் நிழலில் வளர்ந்த அதீதப் பிறவி பிரபாகரன். மாத்தையா அவரது வாகனத்திற்கு அடியிலேயே வெடிகுண்டு பொருத்தினார். ஆனால் வெடிக்கவில்லை. ஏன் வெடிக்கவில்லை என்பதற்கு மனித அறிவு சார்ந்த விளக்கம் எதுவுமில்லை. சாவகச்சேரி நகர் வளைவு திறக்கும் நிகழ்வின் போது அவரோடு மூத்த தளபதிகள் யாவரதும் கதை முடிக்க மாத்தையா ஏற்பாடு செய்திருந் தார்.

விழாவுக்குப் புறப்படும் போது மோசமான வயிற்று நோவு வர விழாவிற்கு அவர் வரவில்லை. வந்திருந்தால் அன்றே அவர் வரலாறு முடிந்திருக்கும். திருநெல்வேலி தாக்குதலின் போது அவரது துப்பாக்கியில் ரவை தீர்கிறது. குனிந்து ரவை நிரப்புகிறார். புறத்தே மின்னல் தெரிகிறது. சக தோழர்களின் பறக்கிற ரவைகள் என நினைக்கிறார். காலையில் பார்த்தால் தான் குனிந்தபோதுதான் நின்ற இடத்திலேயே எதிரியின் ரவைகள் பாய்ந்து வந்திருக்கின்றன. அக்கணம் குனிந்திராவிட்டால் அன்றே அவர் முடிந்திருப்பார். ""கடவுள் காத்து வருகிறார் எனக் கருதலாமா?'' என 2002-ல் அவரிடம் கேட்டேன். ""இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்'' என்றார். தமிழர்களே, நண்பர்களே, முல்லைத்தீவில் கதை முடிய வில்லை. புதிய கதை தொடங்குகிறது. உலகத் தமிழினம் இனி நடக்கப் போவது புதிய தடங்களில்.

நன்றி நக்கீரன் வார இதழ்

Tuesday, May 12, 2009

தயவுசெய்து மாறுங்கள்

"வைக்கல் பட்டடை நாய்" என்று சொல்வார்கள் அது அப்பிடியே எங்கட இனமான தமிழினத்திற்குத்தான் பொருந்தும். ஏனென்றால் பாருங்கள்,

எங்கட நாடு பற்றி எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. எங்கட அம்மா அண்ணை அக்கா எல்லாரும் எரிகுண்டுகளாலும் பசியாலும் நாளாந்தம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எங்களின் உறவுகள் புலம்பெயர் தேசங்களிலிருந்தவாறு பல்வேறுபட்ட போராட்டங்கள்…..தங்களை பசியால் வாட்டி அந்தந்த நாட்டின் அரசிற்கு தங்களின் வேதனையை புரியவைக்க முற்படுகிறார்கள், வீதித்தடைகளை ஏற்படுத்தி கவனத்தையீர்க்கப்போராடுகிறார்கள் ஏன் அண்மையில் இந்தியத்தொலைக்காட்சியில் ஒரு கலைஞர் தன் நடனத்தின் மூலம் தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார். இவ்வாறு ஏதோவொருவகையில் ஒவ்வொருவரும் தம் உணர்வுகளை வேதனைகளை வலிகளை காட்டுகிறார்கள். அம்மா உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும்போது சிரிச்சுக்கொண்டா இருக்க முடியும் எல்லோரும்தான் அழுவார்கள் அதைத்தடுத்து நிறுத்தப்போராடுவார்கள்…போராட உணர்த்தப்படுவார்கள் அப்படி உணராவிட்டால் பிறகென்ன மனிதர்கள் நாங்கள். நான் ஏன் இதைச்சொல்ல வாறேனென்றால் இப்படி உணராதவர்கள் பலர் நம்மத்தியில் இருக்கிறார்கள்.

அங்கு போராடத்துணிவில்லை சரி இங்குவந்தோம் இங்கு எமதுயிருக்கு எந்த பாதிப்புமில்லை என்றவிடத்தில் நாம் இங்கிருந்தவாறு போராடலாம் சரி அதற்கும் சில நாடுகளில் வழியில்லையென்று வைத்துக்கொள்ளுங்களேன் இணையத்தளங்களினூடாக பல பத்திரிகைச்செய்திகள் வருகின்றன அதற்கு கருத்துகள் எழுதுவதிலும் கருத்துக்கணிப்புகளில் பங்குபற்றுவதிலும் ஆர்வம் காட்டலாம். இதை "ஏதாவது செய்யவேண்டுமென" நினைப்பவன் நிச்சயம் செய்வான். ஆனால் சிலர் இருக்கிறார்கள் இதைச்செய்யமாட்டார்கள் (இதுக்கு அவர்களின் 1008 நியாயப்படுத்தல்கள், அதை விடுவம்) சரி இவர்கள் போராடுபவர்களை வாழ்த்தக்கூடவேண்டாம் கொச்சைப்படுத்தாமல் பேசாமல் இருந்தால் கூட எவ்வளவு மேலான விடயமாகவிருக்கும். ஆனால்,

ஒருவன் பசியால் தன்னை வருத்தி போராடிக்கொண்டிருக்கிறான். இந்த புண்ணியவான்கள் என்ன கதைக்கிறார்கள்……….இவன் இயக்கமாயிருக்கும் இல்லாட்டில் அவே பயிற்சிகுடுத்து அனுப்பியிருப்பினம்" இப்படி பல. ஒருதன் நடனத்தின் மூலம் தன் வேதனையை வலியை சொல்லுகிறான் உடனே இந்த புறம்போக்குகள் என்ன சொல்லுதென்றால் " இவனையும் இவன் குழுவையும் இயக்கம்தான் பயிற்சிகுடுத்து அனுப்பியிருக்கு" எப்பிடியிருக்கும். அடே முட்டாள்களே உங்கட அம்மா வலியால் துடிக்கும்போது உங்களை அழுறதுக்கு பயிற்சி கொடுத்தா அனுப்ப வேண்டும் கொஞ்சமாவது யோசிச்சுத்தான் கதைக்கிறீர்களா?

புலம்பெயர் நாடுகளில் பலர் வீதியில் இறங்கி பல்வேறுவகையில் போராடுகிறார்கள். பொலிஸில் அடிவாங்கி இரவு பகலா குளிரிக்க நின்று போராடுறாங்கள் என்னடா என்று இந்த புறம்போக்குகளிடம் கேட்டால் " இவங்கள் என்ன உண்மையான உணர்வோடையா போராடுகிறாங்கள் சும்மா பம்பலா போய் கூத்தடிக்கிறாங்கள், இவங்களுக்கு போராட்டத்தின் அடி நுனி தெரியுமோ? " என்கிறார்கள். இவங்களுக்கு குளிரிக்க போய் இரவு பகலா வீதில நிக்கிறது பம்பலா கிடக்கு எங்க நீ போய் பம்பலா நில் பார்ப்பமென்றால் முடியாது. யோசிப்பதேயில்லை சும்மா கதைக்கவேணுமென்றதுக்காக கதைப்பது. என்ன ஒவ்வொருவனுக்கும் எவ்வளவு உணர்வு இருக்கு போராட்டத்தைப்பற்றி என்ன தெரியுமென்று நேர்முகத்தேர்வு நடத்தியா போராட்டத்திற்கு அனுப்பமுடியும். அவன் அவன் தன்னெழுச்சியா காலத்திற்கெற்றவாறு போராடுகிறான் அதுவே போதுமே வேறயென்ன வேண்டும். சரி நீ போராட்டத்தின் அடி நுனி தெரிஞ்சனி போய் செய்யென்றால் அது முடியாது அதுக்கு 1008 நியாயப்படுத்தல் சொல்லி பின்வாங்கிறது. இதுக்காகத்தான் சொன்னேன் வைக்கல் பட்டடை நாய்கள் என்று இவர்களை.

இந்த புறம்போக்குகள் அடிக்கடியொன்றை சொல்லுவார்கள். நாங்கள் வெறிபிடித்தவர்களாம் இப்ப மக்கள் கொல்லப்படும்போது கதறுகிறோமாம் சிங்கள இடத்தில் குண்டு வெடித்து மக்கள் சாகும்போது மட்டும் சந்தோஷப்படுகிறமாம். இவர்களுக்கு ஒன்றைச்சொல்லுகிறேன் நாங்கள் சந்தோஷப்பட்டதுமில்லை ஆனால் அதே நேரம் கவலைப்பட்டதுமில்லை. ஏனெனில் என்னுடைய வீட்டில் அக்காவை கோரமாக கண்முன்னால் கற்பழிச்சு கொலைசெய்ய அதைப்பார்த்த ஆத்திரத்தில் அண்ணன் போய் அவனுடைய குடும்பத்தை கொலைசெய்தால் நானென்ன அண்ணனை கண்டிக்கவா முடியும் அந்த குடும்பத்திற்காக கவலைப்படவா முடியும் இப்படி அண்ணனை செய்யவைத்துவிட்டாயே என்று கவலைப்படத்தான் முடியும். ஏன் அவனை கொலைசெய்யாமல் அவன் குடும்பத்தை கொல்லவேண்டுமென கேள்விவரும். அவன் ஒவ்வொருமுறையும் அவனுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கிற அண்ணனுடன் சண்டையிடாமல் சுலபமா போய் அப்பாவியான அக்காவைத்தான் தாக்கினால் அவனுக்கு அண்ணன் வேறயெவ்வாறு பதில்கொடுக்கமுடியும். சரி இதையெல்லாவற்றையும் விடுவம். இன்றைக்கு என்ன நடக்கிறது எங்கயாவது சிங்கள இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா? தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள். என்ன நியாயம் கிடைத்தது?

நானும் முன்னர் இப்படித்தான் ஏதாவது யாராவது தீவிரமா போராடினால் அவரைப்பற்றி ஆராய்ச்சி செய்து இவர் இயக்கமாத்தானிருக்குமென்று ஊகிச்சு கதைப்பது, பின்னர் இப்பதான் உணர்ந்தேன் நான் எவ்வளவு கேவலமா கதைத்திருக்கிறேனென்று ஒரு மனிதனுடை உண்மையான உணர்வை மதிக்கத்தவறியிருக்கிறேன்று. இதையிட்டு நான் வெட்கப்படுகிறேன். உண்மையில் ஒரு போராளியின் உணர்வைத்தான் விளங்கிக்கொள்ளத்தவறியிருக்கிறேன் ("இயக்கமாதானிருக்கும்" என்றதிலையே எதோ இயக்கமென்றது ஒரு பயிற்றப்பட்ட இயந்திரம் என்ற கருத்தே தொக்கிநிற்கிறது). ஆகவே இப்பவும் இதே புறம்போக்குத்தன்மையுடனிருக்கும் நண்பர்களே தயவுசெய்து உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றுசேர்ந்து போராடுவோம். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

Friday, May 8, 2009

ஈழத்து நடனப்புயல்

இந்தியாவில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஒரு தமிழீழ மகன் மிக அருமையாக தனது நடனத்தின் மூலம் ஈழத்து இனப்படுகொலையை மிக உணர்ச்சிகரமாக வெளிக்காட்டியுள்ளார்



எமது மக்களின் துயரங்களை வெளிக்கொணர்வதில் தொடர்ந்து இந்திய தொலைக்காட்சிகள் பின்னடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அந்த தொலைக்காட்சியொன்றின் சாதரண நிகழ்ச்சியொன்றின் ஊடாக மிக அழகாக எம் மக்களின் துயர்களை தத்ருபாமாக காட்டியுள்ளார் நடனக்கலைஞர். அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த பலரையும் இப்பவும் இணையத்தளங்களூடாக பார்க்கின்றவர்களையும் கண்ணில நீர் வருமளவுக்கு மிகவும் உணர்வுபூர்வமாக நடனம் நிகழ்த்தியுள்ளார். அவருக்கு அவர் குழுவினருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்.

Thursday, May 7, 2009

சீனாக்களோடு ஒரு நாள் சாப்பாடு

எனக்கு இந்த நாட்டுக்கு வரமுன்னுக்கே சீனாக்களின் சாப்பாட்டைப்பற்றி நிரம்ப கேள்விஞானமிருந்திச்சு; தவளை சாப்பிடுவாங்களாம், கரப்பொத்தான் பாம்பு என்று என்னெனமோ எல்லாம் சாப்பிடுவாங்க என்று கேள்வி. சத்தியமா சொல்லிறேங்க இங்க வந்தப்பிறகுதான் கேள்விப்பட்டன் இவற்றோடு நாய், பூனை, எறும்பு எல்லாம் சாப்பிடுவாங்களாம் (என்ன வேடுவப்பிறவியளோ). இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட பிறகு யாருகாச்சும் சாப்பிட மனம்வருமோ அப்பிடித்தாங்க எனக்கும்


ஆனால் எங்கட ஆபிஸில அன்புத்தொல்லை தாங்கலாது.எத்தினை நாளைக்குத்தான் நான் மரக்கறிதான் சாப்பிடுவனென்று புளுகிக்கொண்டிருப்பது. இதால ஒரு நாள் அவங்களோட போய் சாப்பிட வெளிக்கிட்டன். என்னடா இது எங்கட இடமென்றால் சாப்பாட்டு கடைக்கில உள்ளடக்கையே ஆசையாத்தான் இருக்கும் இதென்ன கோதாரியென்றால் ஆத்தே மணமென்றாலோ…….site office ல சீனன் ஒருதன் lunch box ய் திறக்கேக்க நாங்கள் ஓடுற ஓட்டத்திலயே தெரியும் அதுக்காக இந்த hotel லிலுமா

ஒருமாதிரி அங்கல போய் ஒரு மேசைல இருந்தோம். நல்ல வடிவான மேசை, நல்ல வெள்ளக்கலரில மேசைச்சீலையும் விரிச்சுக்கிடந்துச்சு. கோப்பையல் தடியல் எல்லாம் கொண்டுவந்து வைச்சார்கள்.நான் அந்த தடியை திருப்பிக்குடுத்திட்டு கரண்டி வாங்கினேன். எனக்கு அந்த தடியால சாப்பிடறதெல்லாம் வராது (அதென்ன கோதாரிக்கு தடியை வச்சு ஆட்டுறவங்களோ தெரியாது). சரி சாப்பாடு வந்திச்சு, இன்றைக்கு சத்தி வராமல் மானத்தை காப்பற்ற வேணுமென்று எல்லா கடவுளையும் நினைச்சுக்கொண்டு தொடங்கினன். உண்மைலே அந்தப்பக்கம் கடவுள் எட்டியும் பார்க்கமாட்டார் ஏனெனில் மனிதனை தவிர்ந்த எல்லாம் மேசைல வைச்சிருக்கு பிறகெப்படி அந்தாள் எட்டிப்பார்ப்பார். பக்கத்தில இருந்தவரை தட்டி இதென்னென்று கேட்டேன் அவரும் chicken என்றார் அப்பா நிம்மதி எதோ தெரிந்தவொன்றிருக்கே என்ற நிம்மதி. தீர்மானிச்சாச்சு இதில ஒரு பெரிய துண்டை எடுத்து இதோடயே இன்று முழுக்க சாமாளிப்பதென. பெரிய துண்டை தூக்கி கோப்பைக்கில போட்டு சாப்பிடத்தொடங்கினால் அறு சுவையில ஒரு விதமான ரேஸ்டையும் காணோம். இதெப்படி செய்ததென்று பக்கத்தில கேட்டால் அப்பிடியே செட்டைகளை உரிச்சிட்டு அடுப்புக்கு மேல கிழமைக்கணக்கா தொங்கவிட்டுட்டு அதெயெடுத்து சாப்பிடுவாங்களாம். அப்பதான் யோசிச்சன் அடப்பாவி இவங்க இப்பதான் மனிதன் ஊனை சுட்டு சாப்பிட்டால் சுவையென்று கண்டதிலிருந்து அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறாங்கள். அய்யோ எப்படித்தான் சாமாளிக்கப்போறனோ என்றவாறு மற்ற item ங்களை பார்க்கக்கே இது பராவாயில்லையென்று கிடந்திச்சு.


அப்பிடியே சாப்பிட்டுக்கொண்டு சரி அவங்கள் எப்படித்தான் சாப்பிடிறாங்கள் என்று பார்ப்பமென்று தலையை நிமிர்த்தினால் அடச் சீ அப்பதான் யோச்சன் ஏன் தான் பார்த்தமென்று. உண்மைலே சாப்பட்டு மணத்துக்கு அடக்கி வச்சிருந்த வயிறு குமட்டத்தொடங்கியது. எல்லாரையும் பார்க்கிறன் அப்படியே அந்த தடியால எடுத்து முழுசா வாய்க்குள் போட்டு சப்பு சப்பு என்று சப்பிட்டு மிச்சம் மீதியை மேசைல துப்பிவிடுவாங்கள் ( நாயில இருந்து கொஞ்சம் தான் develop ஆகியிருப்பாங்கள் போல). அப்பிடியே மேசையெல்லாம் பரவிக்கிடக்கும். இதைவிட எங்களுக்கு எதெல்லாம் indecent வேலையல் என்று சொல்லித்தந்தார்களோ அதெல்லாத்தையும் செய்வார்கள். ஒருதனை பார்க்கிறன் அப்பிடியே சாப்பிட்டுக்கொண்டு மூக்கை தோண்டுகிறான் எப்பிடியிருந்திருக்கும் எனக்கு. இப்படியா ஒரு மாதிரி அன்றய சாப்பாடு முடிஞ்சுது. ஆனால் இப்ப என்ன ஒரளவுக்கு பழகிட்டுது (அதுக்காக நான் வேடுவ காலத்துக்கு போயிட்டனென்று நினைக்கதிங்க)

Wednesday, May 6, 2009

கருணாநிதியின் போர்நிறுத்தம்?????

//இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தான் இருந்த உண்ணாவிரதம் வெற்றிபெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகில் தற்போது தானும் இருந்திருப்பேனென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி கருணாநிதி திடீரென அண்ணா சமாதியில் ஆறு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் எழுதியுள்ளதாவது, தமிழர்களைக் காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்று தான் யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரத முடிவை எடுத்தேன். வீட்டில் உள்ளவர்களுக்குக் கூட தெரிவிக்கவில்லை. உண்ணாவிரதம் வெற்றிபெற்றதால் தான் உங்களோடு இருக்கிறேன். இல்லாவிட்டால் விருதுநகர் சங்கரலிங்க கல்லறையின் அருகிலோ, ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகிலோதான் இருந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி இனப்படுகொலையை ஓய்வின்றி மேற்கொண்டுவரும் நிலையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று தமிழக முதல்வர் தொடர்ந்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இருந்தாலும், இது ஈழத் தமிழ் மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.//


இச்செய்தி கடந்த சிலநாட்களுக்கு முன்னம் வந்திருந்தது. ஏன் இன்றைக்கு நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போதுகூட கருணாநிதியும் திமுக வினரும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

என்னப்போல கடைசி 1% நம்பிக்கை வைத்திருந்தவர்களின் நம்பிக்கையும் போச்சு.

ஏனய்யா கருணாநிதி இந்த பச்சைத்துரோகம்…………….மன்னிக்கவேண்டும் என்னால இதைத்துரோகமாகத்தான் பார்க்கமுடியுது. ஏனெனில் தன்னை தலமையாக ஏற்றுக்கொண்ட ஒரு சமூகம் தன் உறவுகள் கொல்லப்படுகிறார்கள் என்று கதறி கதறி காப்பாற்ற சொல்லிக்கொண்டிருக்கும்போது அந்த சமூகத்தை திசைதிருப்பும் விதமாக அல்லது குழப்பும் விதமாக போர் எல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டது நீங்கள் கதறத்தேவையில்லை என்று (போர்நிறுத்தப்படவில்லை என்று தனக்கு நல்லா தெரிந்தும்) நம்பவைக்க முயற்சிப்பதை துரோகமென்றாமல் வேறயென்னவென்று சொல்ல..

அன்றைக்கு கருணாநிதி அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டி, மத்தியரசை நோக்கி போரைநிறுத்து இல்லாவிட்டால் அனைவரும் பதவி விலகுவோமென காலக்கெடு விதித்து போராட்டம் நடத்தும்போது எவ்வளவு சந்தோஷப்பட்டோம். இவ்வளவுகாலம் வெளிப்படுத்தாவிட்டாலும், தான் ஆடவிட்டாலும் தன் தசையாடுமென்பார்கள் அதுபோல எமக்காக கொதிக்கிறாரே என்று இனி இல்லையென்ற சந்தோஷம் எங்களுக்கு..
ஒன்றில் எமக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் தூக்கியெறியப்படும் அல்லது போர்நிறுத்தமேற்பட்டு நல்ல தீர்வு வருமென் ஒவ்வொரு பொழுதும் என்ன நியூஸ் என்று ஆவலுடன் அந்த காலக்கெடுவை எதிர்பார்த்துக்கிடந்தோம். பின்னர் அந்த பதவி விலகல் போராட்டத்திலிருந்து விலகியபோதும்கூட எமது சந்தோஷத்தில் சின்ன குறைச்சலேயொழிய நம்பிக்கை இழக்கவில்லை. எப்பிடியோ கருணாநிதி எமது நன்மைக்காக பாடுபடுபவரே என்ற நம்பிக்கை. அவர் பிழை விடமாட்டாரென்ற நம்பிக்கை. அவர் பதவி விலகலை செய்திருந்தால் வேறயொரு தமிழின துரோக கட்சியொன்று காங்கிரஸிற்கு முண்டுகொடுத்திருக்கும் அதால எமக்குத்தான் தீமை என்று கருணாநிதி எண்ணியிருக்கலாமென நாம் எமது மனதை தேற்றி நம்பிக்கையுடனே தான் இருந்தோம்.

பின்னர் அந்த மனிதச்சங்கிலிப்போராட்டம் இது அந்த சின்ன மனக்குறைச்சலையும் நீக்கியது.

முத்துகுமாரைத்தொடர்ந்து பலர் எமக்காக தீக்குளிச்சு தம் இன்னுயிரை தந்தபோது, கருணாநிதி வெறும் தந்தியனுப்புதலும், டில்லி போய் பேசுவதுமாகதானிருந்தார். இதையிட்டு எமக்கு சற்று கோபமேயொழிய நம்பிக்கை வைத்துக்கொண்டுதானிருந்தோம்

பின்னர் ஈழப்பிரச்சனையை கதைப்பதற்கென்று சட்டசபையை கூட்டப்போறதாக செய்தி கேள்விப்பட்டதும் சந்தோஷப்பட்டம். இருந்தும், அக்கூட்டத்தில் வெறும் சகோதர யுத்தத்தை கதைத்து தேவையற்றவற்றை கதைத்து உருப்படியா எதையும் செய்யாத போதும் பாதி நம்பிக்கை இழக்கவில்லை.

ஆனால் இன்றைக்கு உங்கள் உண்மையான முகத்தை நீங்களே இதுதான் என் முகமென காட்டிவிட்டீர்களே இனி எப்படி நம்பிக்கை வைப்பது. துரோகியென்று கூடவல்லவா காட்டிவிட்டீர்கள் பின்னரெப்படி மனதை தேற்றுவது……. சீ...........கருணா…..என்ற பெயரைக்கேட்கவே அருவருப்பாகவிருக்கிறது.

இப்பதான் என்னைப்போன்ற கொஞ்ச முட்டாள்களுக்கு புரிந்தது நீங்கள் அன்றைக்கு பதவி விலகலிருந்தே உங்கள் நாடகத்தை தொடங்கிவிட்டீர்கள் என்று. என்ன இப்ப நீங்கள் உங்கள் நடிப்பில் சற்று சொதப்பிவிட்டிங்கள். அதால எங்களுக்கு புரிந்துவிட்டது இது நாடமென்று. இதற்காக உங்கள் எஜமானி சோனியா சின்னனா கோவிச்சிருப்பா என்ன?