Wednesday, May 6, 2009

கருணாநிதியின் போர்நிறுத்தம்?????

//இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தான் இருந்த உண்ணாவிரதம் வெற்றிபெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகில் தற்போது தானும் இருந்திருப்பேனென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி கருணாநிதி திடீரென அண்ணா சமாதியில் ஆறு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் எழுதியுள்ளதாவது, தமிழர்களைக் காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்று தான் யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரத முடிவை எடுத்தேன். வீட்டில் உள்ளவர்களுக்குக் கூட தெரிவிக்கவில்லை. உண்ணாவிரதம் வெற்றிபெற்றதால் தான் உங்களோடு இருக்கிறேன். இல்லாவிட்டால் விருதுநகர் சங்கரலிங்க கல்லறையின் அருகிலோ, ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகிலோதான் இருந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி இனப்படுகொலையை ஓய்வின்றி மேற்கொண்டுவரும் நிலையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று தமிழக முதல்வர் தொடர்ந்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இருந்தாலும், இது ஈழத் தமிழ் மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.//


இச்செய்தி கடந்த சிலநாட்களுக்கு முன்னம் வந்திருந்தது. ஏன் இன்றைக்கு நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போதுகூட கருணாநிதியும் திமுக வினரும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

என்னப்போல கடைசி 1% நம்பிக்கை வைத்திருந்தவர்களின் நம்பிக்கையும் போச்சு.

ஏனய்யா கருணாநிதி இந்த பச்சைத்துரோகம்…………….மன்னிக்கவேண்டும் என்னால இதைத்துரோகமாகத்தான் பார்க்கமுடியுது. ஏனெனில் தன்னை தலமையாக ஏற்றுக்கொண்ட ஒரு சமூகம் தன் உறவுகள் கொல்லப்படுகிறார்கள் என்று கதறி கதறி காப்பாற்ற சொல்லிக்கொண்டிருக்கும்போது அந்த சமூகத்தை திசைதிருப்பும் விதமாக அல்லது குழப்பும் விதமாக போர் எல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டது நீங்கள் கதறத்தேவையில்லை என்று (போர்நிறுத்தப்படவில்லை என்று தனக்கு நல்லா தெரிந்தும்) நம்பவைக்க முயற்சிப்பதை துரோகமென்றாமல் வேறயென்னவென்று சொல்ல..

அன்றைக்கு கருணாநிதி அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டி, மத்தியரசை நோக்கி போரைநிறுத்து இல்லாவிட்டால் அனைவரும் பதவி விலகுவோமென காலக்கெடு விதித்து போராட்டம் நடத்தும்போது எவ்வளவு சந்தோஷப்பட்டோம். இவ்வளவுகாலம் வெளிப்படுத்தாவிட்டாலும், தான் ஆடவிட்டாலும் தன் தசையாடுமென்பார்கள் அதுபோல எமக்காக கொதிக்கிறாரே என்று இனி இல்லையென்ற சந்தோஷம் எங்களுக்கு..
ஒன்றில் எமக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் தூக்கியெறியப்படும் அல்லது போர்நிறுத்தமேற்பட்டு நல்ல தீர்வு வருமென் ஒவ்வொரு பொழுதும் என்ன நியூஸ் என்று ஆவலுடன் அந்த காலக்கெடுவை எதிர்பார்த்துக்கிடந்தோம். பின்னர் அந்த பதவி விலகல் போராட்டத்திலிருந்து விலகியபோதும்கூட எமது சந்தோஷத்தில் சின்ன குறைச்சலேயொழிய நம்பிக்கை இழக்கவில்லை. எப்பிடியோ கருணாநிதி எமது நன்மைக்காக பாடுபடுபவரே என்ற நம்பிக்கை. அவர் பிழை விடமாட்டாரென்ற நம்பிக்கை. அவர் பதவி விலகலை செய்திருந்தால் வேறயொரு தமிழின துரோக கட்சியொன்று காங்கிரஸிற்கு முண்டுகொடுத்திருக்கும் அதால எமக்குத்தான் தீமை என்று கருணாநிதி எண்ணியிருக்கலாமென நாம் எமது மனதை தேற்றி நம்பிக்கையுடனே தான் இருந்தோம்.

பின்னர் அந்த மனிதச்சங்கிலிப்போராட்டம் இது அந்த சின்ன மனக்குறைச்சலையும் நீக்கியது.

முத்துகுமாரைத்தொடர்ந்து பலர் எமக்காக தீக்குளிச்சு தம் இன்னுயிரை தந்தபோது, கருணாநிதி வெறும் தந்தியனுப்புதலும், டில்லி போய் பேசுவதுமாகதானிருந்தார். இதையிட்டு எமக்கு சற்று கோபமேயொழிய நம்பிக்கை வைத்துக்கொண்டுதானிருந்தோம்

பின்னர் ஈழப்பிரச்சனையை கதைப்பதற்கென்று சட்டசபையை கூட்டப்போறதாக செய்தி கேள்விப்பட்டதும் சந்தோஷப்பட்டம். இருந்தும், அக்கூட்டத்தில் வெறும் சகோதர யுத்தத்தை கதைத்து தேவையற்றவற்றை கதைத்து உருப்படியா எதையும் செய்யாத போதும் பாதி நம்பிக்கை இழக்கவில்லை.

ஆனால் இன்றைக்கு உங்கள் உண்மையான முகத்தை நீங்களே இதுதான் என் முகமென காட்டிவிட்டீர்களே இனி எப்படி நம்பிக்கை வைப்பது. துரோகியென்று கூடவல்லவா காட்டிவிட்டீர்கள் பின்னரெப்படி மனதை தேற்றுவது……. சீ...........கருணா…..என்ற பெயரைக்கேட்கவே அருவருப்பாகவிருக்கிறது.

இப்பதான் என்னைப்போன்ற கொஞ்ச முட்டாள்களுக்கு புரிந்தது நீங்கள் அன்றைக்கு பதவி விலகலிருந்தே உங்கள் நாடகத்தை தொடங்கிவிட்டீர்கள் என்று. என்ன இப்ப நீங்கள் உங்கள் நடிப்பில் சற்று சொதப்பிவிட்டிங்கள். அதால எங்களுக்கு புரிந்துவிட்டது இது நாடமென்று. இதற்காக உங்கள் எஜமானி சோனியா சின்னனா கோவிச்சிருப்பா என்ன?



2 மறுமொழிகள்:

ramalingam said...

ரஜனி நடிக்கும் எந்திரன்.
கலைஞர் நடிக்கும் "தந்தி"ரன்.

விக்டர் said...

வருகைக்கு நன்றி ராமலிங்கம்
மாபெரும் நடிகரப்பா.........