எனக்கு இந்த நாட்டுக்கு வரமுன்னுக்கே சீனாக்களின் சாப்பாட்டைப்பற்றி நிரம்ப கேள்விஞானமிருந்திச்சு; தவளை சாப்பிடுவாங்களாம், கரப்பொத்தான் பாம்பு என்று என்னெனமோ எல்லாம் சாப்பிடுவாங்க என்று கேள்வி. சத்தியமா சொல்லிறேங்க இங்க வந்தப்பிறகுதான் கேள்விப்பட்டன் இவற்றோடு நாய், பூனை, எறும்பு எல்லாம் சாப்பிடுவாங்களாம் (என்ன வேடுவப்பிறவியளோ). இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட பிறகு யாருகாச்சும் சாப்பிட மனம்வருமோ அப்பிடித்தாங்க எனக்கும்
ஆனால் எங்கட ஆபிஸில அன்புத்தொல்லை தாங்கலாது.எத்தினை நாளைக்குத்தான் நான் மரக்கறிதான் சாப்பிடுவனென்று புளுகிக்கொண்டிருப்பது. இதால ஒரு நாள் அவங்களோட போய் சாப்பிட வெளிக்கிட்டன். என்னடா இது எங்கட இடமென்றால் சாப்பாட்டு கடைக்கில உள்ளடக்கையே ஆசையாத்தான் இருக்கும் இதென்ன கோதாரியென்றால் ஆத்தே மணமென்றாலோ…….site office ல சீனன் ஒருதன் lunch box ய் திறக்கேக்க நாங்கள் ஓடுற ஓட்டத்திலயே தெரியும் அதுக்காக இந்த hotel லிலுமா
ஒருமாதிரி அங்கல போய் ஒரு மேசைல இருந்தோம். நல்ல வடிவான மேசை, நல்ல வெள்ளக்கலரில மேசைச்சீலையும் விரிச்சுக்கிடந்துச்சு. கோப்பையல் தடியல் எல்லாம் கொண்டுவந்து வைச்சார்கள்.நான் அந்த தடியை திருப்பிக்குடுத்திட்டு கரண்டி வாங்கினேன். எனக்கு அந்த தடியால சாப்பிடறதெல்லாம் வராது (அதென்ன கோதாரிக்கு தடியை வச்சு ஆட்டுறவங்களோ தெரியாது). சரி சாப்பாடு வந்திச்சு, இன்றைக்கு சத்தி வராமல் மானத்தை காப்பற்ற வேணுமென்று எல்லா கடவுளையும் நினைச்சுக்கொண்டு தொடங்கினன். உண்மைலே அந்தப்பக்கம் கடவுள் எட்டியும் பார்க்கமாட்டார் ஏனெனில் மனிதனை தவிர்ந்த எல்லாம் மேசைல வைச்சிருக்கு பிறகெப்படி அந்தாள் எட்டிப்பார்ப்பார். பக்கத்தில இருந்தவரை தட்டி இதென்னென்று கேட்டேன் அவரும் chicken என்றார் அப்பா நிம்மதி எதோ தெரிந்தவொன்றிருக்கே என்ற நிம்மதி. தீர்மானிச்சாச்சு இதில ஒரு பெரிய துண்டை எடுத்து இதோடயே இன்று முழுக்க சாமாளிப்பதென. பெரிய துண்டை தூக்கி கோப்பைக்கில போட்டு சாப்பிடத்தொடங்கினால் அறு சுவையில ஒரு விதமான ரேஸ்டையும் காணோம். இதெப்படி செய்ததென்று பக்கத்தில கேட்டால் அப்பிடியே செட்டைகளை உரிச்சிட்டு அடுப்புக்கு மேல கிழமைக்கணக்கா தொங்கவிட்டுட்டு அதெயெடுத்து சாப்பிடுவாங்களாம். அப்பதான் யோசிச்சன் அடப்பாவி இவங்க இப்பதான் மனிதன் ஊனை சுட்டு சாப்பிட்டால் சுவையென்று கண்டதிலிருந்து அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறாங்கள். அய்யோ எப்படித்தான் சாமாளிக்கப்போறனோ என்றவாறு மற்ற item ங்களை பார்க்கக்கே இது பராவாயில்லையென்று கிடந்திச்சு.
அப்பிடியே சாப்பிட்டுக்கொண்டு சரி அவங்கள் எப்படித்தான் சாப்பிடிறாங்கள் என்று பார்ப்பமென்று தலையை நிமிர்த்தினால் அடச் சீ அப்பதான் யோச்சன் ஏன் தான் பார்த்தமென்று. உண்மைலே சாப்பட்டு மணத்துக்கு அடக்கி வச்சிருந்த வயிறு குமட்டத்தொடங்கியது. எல்லாரையும் பார்க்கிறன் அப்படியே அந்த தடியால எடுத்து முழுசா வாய்க்குள் போட்டு சப்பு சப்பு என்று சப்பிட்டு மிச்சம் மீதியை மேசைல துப்பிவிடுவாங்கள் ( நாயில இருந்து கொஞ்சம் தான் develop ஆகியிருப்பாங்கள் போல). அப்பிடியே மேசையெல்லாம் பரவிக்கிடக்கும். இதைவிட எங்களுக்கு எதெல்லாம் indecent வேலையல் என்று சொல்லித்தந்தார்களோ அதெல்லாத்தையும் செய்வார்கள். ஒருதனை பார்க்கிறன் அப்பிடியே சாப்பிட்டுக்கொண்டு மூக்கை தோண்டுகிறான் எப்பிடியிருந்திருக்கும் எனக்கு. இப்படியா ஒரு மாதிரி அன்றய சாப்பாடு முடிஞ்சுது. ஆனால் இப்ப என்ன ஒரளவுக்கு பழகிட்டுது (அதுக்காக நான் வேடுவ காலத்துக்கு போயிட்டனென்று நினைக்கதிங்க)



0 மறுமொழிகள்:
Post a Comment