"வைக்கல் பட்டடை நாய்" என்று சொல்வார்கள் அது அப்பிடியே எங்கட இனமான தமிழினத்திற்குத்தான் பொருந்தும். ஏனென்றால் பாருங்கள்,
எங்கட நாடு பற்றி எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. எங்கட அம்மா அண்ணை அக்கா எல்லாரும் எரிகுண்டுகளாலும் பசியாலும் நாளாந்தம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எங்களின் உறவுகள் புலம்பெயர் தேசங்களிலிருந்தவாறு பல்வேறுபட்ட போராட்டங்கள்…..தங்களை பசியால் வாட்டி அந்தந்த நாட்டின் அரசிற்கு தங்களின் வேதனையை புரியவைக்க முற்படுகிறார்கள், வீதித்தடைகளை ஏற்படுத்தி கவனத்தையீர்க்கப்போராடுகிறார்கள் ஏன் அண்மையில் இந்தியத்தொலைக்காட்சியில் ஒரு கலைஞர் தன் நடனத்தின் மூலம் தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார். இவ்வாறு ஏதோவொருவகையில் ஒவ்வொருவரும் தம் உணர்வுகளை வேதனைகளை வலிகளை காட்டுகிறார்கள். அம்மா உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும்போது சிரிச்சுக்கொண்டா இருக்க முடியும் எல்லோரும்தான் அழுவார்கள் அதைத்தடுத்து நிறுத்தப்போராடுவார்கள்…போராட உணர்த்தப்படுவார்கள் அப்படி உணராவிட்டால் பிறகென்ன மனிதர்கள் நாங்கள். நான் ஏன் இதைச்சொல்ல வாறேனென்றால் இப்படி உணராதவர்கள் பலர் நம்மத்தியில் இருக்கிறார்கள்.
அங்கு போராடத்துணிவில்லை சரி இங்குவந்தோம் இங்கு எமதுயிருக்கு எந்த பாதிப்புமில்லை என்றவிடத்தில் நாம் இங்கிருந்தவாறு போராடலாம் சரி அதற்கும் சில நாடுகளில் வழியில்லையென்று வைத்துக்கொள்ளுங்களேன் இணையத்தளங்களினூடாக பல பத்திரிகைச்செய்திகள் வருகின்றன அதற்கு கருத்துகள் எழுதுவதிலும் கருத்துக்கணிப்புகளில் பங்குபற்றுவதிலும் ஆர்வம் காட்டலாம். இதை "ஏதாவது செய்யவேண்டுமென" நினைப்பவன் நிச்சயம் செய்வான். ஆனால் சிலர் இருக்கிறார்கள் இதைச்செய்யமாட்டார்கள் (இதுக்கு அவர்களின் 1008 நியாயப்படுத்தல்கள், அதை விடுவம்) சரி இவர்கள் போராடுபவர்களை வாழ்த்தக்கூடவேண்டாம் கொச்சைப்படுத்தாமல் பேசாமல் இருந்தால் கூட எவ்வளவு மேலான விடயமாகவிருக்கும். ஆனால்,
ஒருவன் பசியால் தன்னை வருத்தி போராடிக்கொண்டிருக்கிறான். இந்த புண்ணியவான்கள் என்ன கதைக்கிறார்கள்……….இவன் இயக்கமாயிருக்கும் இல்லாட்டில் அவே பயிற்சிகுடுத்து அனுப்பியிருப்பினம்" இப்படி பல. ஒருதன் நடனத்தின் மூலம் தன் வேதனையை வலியை சொல்லுகிறான் உடனே இந்த புறம்போக்குகள் என்ன சொல்லுதென்றால் " இவனையும் இவன் குழுவையும் இயக்கம்தான் பயிற்சிகுடுத்து அனுப்பியிருக்கு" எப்பிடியிருக்கும். அடே முட்டாள்களே உங்கட அம்மா வலியால் துடிக்கும்போது உங்களை அழுறதுக்கு பயிற்சி கொடுத்தா அனுப்ப வேண்டும் கொஞ்சமாவது யோசிச்சுத்தான் கதைக்கிறீர்களா?
புலம்பெயர் நாடுகளில் பலர் வீதியில் இறங்கி பல்வேறுவகையில் போராடுகிறார்கள். பொலிஸில் அடிவாங்கி இரவு பகலா குளிரிக்க நின்று போராடுறாங்கள் என்னடா என்று இந்த புறம்போக்குகளிடம் கேட்டால் " இவங்கள் என்ன உண்மையான உணர்வோடையா போராடுகிறாங்கள் சும்மா பம்பலா போய் கூத்தடிக்கிறாங்கள், இவங்களுக்கு போராட்டத்தின் அடி நுனி தெரியுமோ? " என்கிறார்கள். இவங்களுக்கு குளிரிக்க போய் இரவு பகலா வீதில நிக்கிறது பம்பலா கிடக்கு எங்க நீ போய் பம்பலா நில் பார்ப்பமென்றால் முடியாது. யோசிப்பதேயில்லை சும்மா கதைக்கவேணுமென்றதுக்காக கதைப்பது. என்ன ஒவ்வொருவனுக்கும் எவ்வளவு உணர்வு இருக்கு போராட்டத்தைப்பற்றி என்ன தெரியுமென்று நேர்முகத்தேர்வு நடத்தியா போராட்டத்திற்கு அனுப்பமுடியும். அவன் அவன் தன்னெழுச்சியா காலத்திற்கெற்றவாறு போராடுகிறான் அதுவே போதுமே வேறயென்ன வேண்டும். சரி நீ போராட்டத்தின் அடி நுனி தெரிஞ்சனி போய் செய்யென்றால் அது முடியாது அதுக்கு 1008 நியாயப்படுத்தல் சொல்லி பின்வாங்கிறது. இதுக்காகத்தான் சொன்னேன் வைக்கல் பட்டடை நாய்கள் என்று இவர்களை.
இந்த புறம்போக்குகள் அடிக்கடியொன்றை சொல்லுவார்கள். நாங்கள் வெறிபிடித்தவர்களாம் இப்ப மக்கள் கொல்லப்படும்போது கதறுகிறோமாம் சிங்கள இடத்தில் குண்டு வெடித்து மக்கள் சாகும்போது மட்டும் சந்தோஷப்படுகிறமாம். இவர்களுக்கு ஒன்றைச்சொல்லுகிறேன் நாங்கள் சந்தோஷப்பட்டதுமில்லை ஆனால் அதே நேரம் கவலைப்பட்டதுமில்லை. ஏனெனில் என்னுடைய வீட்டில் அக்காவை கோரமாக கண்முன்னால் கற்பழிச்சு கொலைசெய்ய அதைப்பார்த்த ஆத்திரத்தில் அண்ணன் போய் அவனுடைய குடும்பத்தை கொலைசெய்தால் நானென்ன அண்ணனை கண்டிக்கவா முடியும் அந்த குடும்பத்திற்காக கவலைப்படவா முடியும் இப்படி அண்ணனை செய்யவைத்துவிட்டாயே என்று கவலைப்படத்தான் முடியும். ஏன் அவனை கொலைசெய்யாமல் அவன் குடும்பத்தை கொல்லவேண்டுமென கேள்விவரும். அவன் ஒவ்வொருமுறையும் அவனுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கிற அண்ணனுடன் சண்டையிடாமல் சுலபமா போய் அப்பாவியான அக்காவைத்தான் தாக்கினால் அவனுக்கு அண்ணன் வேறயெவ்வாறு பதில்கொடுக்கமுடியும். சரி இதையெல்லாவற்றையும் விடுவம். இன்றைக்கு என்ன நடக்கிறது எங்கயாவது சிங்கள இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா? தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள். என்ன நியாயம் கிடைத்தது?
நானும் முன்னர் இப்படித்தான் ஏதாவது யாராவது தீவிரமா போராடினால் அவரைப்பற்றி ஆராய்ச்சி செய்து இவர் இயக்கமாத்தானிருக்குமென்று ஊகிச்சு கதைப்பது, பின்னர் இப்பதான் உணர்ந்தேன் நான் எவ்வளவு கேவலமா கதைத்திருக்கிறேனென்று ஒரு மனிதனுடை உண்மையான உணர்வை மதிக்கத்தவறியிருக்கிறேன்று. இதையிட்டு நான் வெட்கப்படுகிறேன். உண்மையில் ஒரு போராளியின் உணர்வைத்தான் விளங்கிக்கொள்ளத்தவறியிருக்கிறேன் ("இயக்கமாதானிருக்கும்" என்றதிலையே எதோ இயக்கமென்றது ஒரு பயிற்றப்பட்ட இயந்திரம் என்ற கருத்தே தொக்கிநிற்கிறது). ஆகவே இப்பவும் இதே புறம்போக்குத்தன்மையுடனிருக்கும் நண்பர்களே தயவுசெய்து உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றுசேர்ந்து போராடுவோம். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
எங்கட நாடு பற்றி எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. எங்கட அம்மா அண்ணை அக்கா எல்லாரும் எரிகுண்டுகளாலும் பசியாலும் நாளாந்தம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எங்களின் உறவுகள் புலம்பெயர் தேசங்களிலிருந்தவாறு பல்வேறுபட்ட போராட்டங்கள்…..தங்களை பசியால் வாட்டி அந்தந்த நாட்டின் அரசிற்கு தங்களின் வேதனையை புரியவைக்க முற்படுகிறார்கள், வீதித்தடைகளை ஏற்படுத்தி கவனத்தையீர்க்கப்போராடுகிறார்கள் ஏன் அண்மையில் இந்தியத்தொலைக்காட்சியில் ஒரு கலைஞர் தன் நடனத்தின் மூலம் தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார். இவ்வாறு ஏதோவொருவகையில் ஒவ்வொருவரும் தம் உணர்வுகளை வேதனைகளை வலிகளை காட்டுகிறார்கள். அம்மா உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும்போது சிரிச்சுக்கொண்டா இருக்க முடியும் எல்லோரும்தான் அழுவார்கள் அதைத்தடுத்து நிறுத்தப்போராடுவார்கள்…போராட உணர்த்தப்படுவார்கள் அப்படி உணராவிட்டால் பிறகென்ன மனிதர்கள் நாங்கள். நான் ஏன் இதைச்சொல்ல வாறேனென்றால் இப்படி உணராதவர்கள் பலர் நம்மத்தியில் இருக்கிறார்கள்.
அங்கு போராடத்துணிவில்லை சரி இங்குவந்தோம் இங்கு எமதுயிருக்கு எந்த பாதிப்புமில்லை என்றவிடத்தில் நாம் இங்கிருந்தவாறு போராடலாம் சரி அதற்கும் சில நாடுகளில் வழியில்லையென்று வைத்துக்கொள்ளுங்களேன் இணையத்தளங்களினூடாக பல பத்திரிகைச்செய்திகள் வருகின்றன அதற்கு கருத்துகள் எழுதுவதிலும் கருத்துக்கணிப்புகளில் பங்குபற்றுவதிலும் ஆர்வம் காட்டலாம். இதை "ஏதாவது செய்யவேண்டுமென" நினைப்பவன் நிச்சயம் செய்வான். ஆனால் சிலர் இருக்கிறார்கள் இதைச்செய்யமாட்டார்கள் (இதுக்கு அவர்களின் 1008 நியாயப்படுத்தல்கள், அதை விடுவம்) சரி இவர்கள் போராடுபவர்களை வாழ்த்தக்கூடவேண்டாம் கொச்சைப்படுத்தாமல் பேசாமல் இருந்தால் கூட எவ்வளவு மேலான விடயமாகவிருக்கும். ஆனால்,
ஒருவன் பசியால் தன்னை வருத்தி போராடிக்கொண்டிருக்கிறான். இந்த புண்ணியவான்கள் என்ன கதைக்கிறார்கள்……….இவன் இயக்கமாயிருக்கும் இல்லாட்டில் அவே பயிற்சிகுடுத்து அனுப்பியிருப்பினம்" இப்படி பல. ஒருதன் நடனத்தின் மூலம் தன் வேதனையை வலியை சொல்லுகிறான் உடனே இந்த புறம்போக்குகள் என்ன சொல்லுதென்றால் " இவனையும் இவன் குழுவையும் இயக்கம்தான் பயிற்சிகுடுத்து அனுப்பியிருக்கு" எப்பிடியிருக்கும். அடே முட்டாள்களே உங்கட அம்மா வலியால் துடிக்கும்போது உங்களை அழுறதுக்கு பயிற்சி கொடுத்தா அனுப்ப வேண்டும் கொஞ்சமாவது யோசிச்சுத்தான் கதைக்கிறீர்களா?
புலம்பெயர் நாடுகளில் பலர் வீதியில் இறங்கி பல்வேறுவகையில் போராடுகிறார்கள். பொலிஸில் அடிவாங்கி இரவு பகலா குளிரிக்க நின்று போராடுறாங்கள் என்னடா என்று இந்த புறம்போக்குகளிடம் கேட்டால் " இவங்கள் என்ன உண்மையான உணர்வோடையா போராடுகிறாங்கள் சும்மா பம்பலா போய் கூத்தடிக்கிறாங்கள், இவங்களுக்கு போராட்டத்தின் அடி நுனி தெரியுமோ? " என்கிறார்கள். இவங்களுக்கு குளிரிக்க போய் இரவு பகலா வீதில நிக்கிறது பம்பலா கிடக்கு எங்க நீ போய் பம்பலா நில் பார்ப்பமென்றால் முடியாது. யோசிப்பதேயில்லை சும்மா கதைக்கவேணுமென்றதுக்காக கதைப்பது. என்ன ஒவ்வொருவனுக்கும் எவ்வளவு உணர்வு இருக்கு போராட்டத்தைப்பற்றி என்ன தெரியுமென்று நேர்முகத்தேர்வு நடத்தியா போராட்டத்திற்கு அனுப்பமுடியும். அவன் அவன் தன்னெழுச்சியா காலத்திற்கெற்றவாறு போராடுகிறான் அதுவே போதுமே வேறயென்ன வேண்டும். சரி நீ போராட்டத்தின் அடி நுனி தெரிஞ்சனி போய் செய்யென்றால் அது முடியாது அதுக்கு 1008 நியாயப்படுத்தல் சொல்லி பின்வாங்கிறது. இதுக்காகத்தான் சொன்னேன் வைக்கல் பட்டடை நாய்கள் என்று இவர்களை.
இந்த புறம்போக்குகள் அடிக்கடியொன்றை சொல்லுவார்கள். நாங்கள் வெறிபிடித்தவர்களாம் இப்ப மக்கள் கொல்லப்படும்போது கதறுகிறோமாம் சிங்கள இடத்தில் குண்டு வெடித்து மக்கள் சாகும்போது மட்டும் சந்தோஷப்படுகிறமாம். இவர்களுக்கு ஒன்றைச்சொல்லுகிறேன் நாங்கள் சந்தோஷப்பட்டதுமில்லை ஆனால் அதே நேரம் கவலைப்பட்டதுமில்லை. ஏனெனில் என்னுடைய வீட்டில் அக்காவை கோரமாக கண்முன்னால் கற்பழிச்சு கொலைசெய்ய அதைப்பார்த்த ஆத்திரத்தில் அண்ணன் போய் அவனுடைய குடும்பத்தை கொலைசெய்தால் நானென்ன அண்ணனை கண்டிக்கவா முடியும் அந்த குடும்பத்திற்காக கவலைப்படவா முடியும் இப்படி அண்ணனை செய்யவைத்துவிட்டாயே என்று கவலைப்படத்தான் முடியும். ஏன் அவனை கொலைசெய்யாமல் அவன் குடும்பத்தை கொல்லவேண்டுமென கேள்விவரும். அவன் ஒவ்வொருமுறையும் அவனுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கிற அண்ணனுடன் சண்டையிடாமல் சுலபமா போய் அப்பாவியான அக்காவைத்தான் தாக்கினால் அவனுக்கு அண்ணன் வேறயெவ்வாறு பதில்கொடுக்கமுடியும். சரி இதையெல்லாவற்றையும் விடுவம். இன்றைக்கு என்ன நடக்கிறது எங்கயாவது சிங்கள இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா? தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள். என்ன நியாயம் கிடைத்தது?
நானும் முன்னர் இப்படித்தான் ஏதாவது யாராவது தீவிரமா போராடினால் அவரைப்பற்றி ஆராய்ச்சி செய்து இவர் இயக்கமாத்தானிருக்குமென்று ஊகிச்சு கதைப்பது, பின்னர் இப்பதான் உணர்ந்தேன் நான் எவ்வளவு கேவலமா கதைத்திருக்கிறேனென்று ஒரு மனிதனுடை உண்மையான உணர்வை மதிக்கத்தவறியிருக்கிறேன்று. இதையிட்டு நான் வெட்கப்படுகிறேன். உண்மையில் ஒரு போராளியின் உணர்வைத்தான் விளங்கிக்கொள்ளத்தவறியிருக்கிறேன் ("இயக்கமாதானிருக்கும்" என்றதிலையே எதோ இயக்கமென்றது ஒரு பயிற்றப்பட்ட இயந்திரம் என்ற கருத்தே தொக்கிநிற்கிறது). ஆகவே இப்பவும் இதே புறம்போக்குத்தன்மையுடனிருக்கும் நண்பர்களே தயவுசெய்து உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றுசேர்ந்து போராடுவோம். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.



1 மறுமொழிகள்:
சில பிறவிகள் அப்படித்தான் இருக்கும்!
அவர்கள் பேச்சைப் புறந்தள்ளி உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.
'இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கு'மென உங்களைக் குறித்துக் கூறினால், வருந்த வேண்டா!
மனத்திற்குள் மகிழ்ந்து கொண்டு, வெளியில் எதுவும் கூறாது ஆக்கமான பணிகளில் ஈடுபடுங்கள்.
Post a Comment