இது உண்மையில் புதுவருடத்தன்று எனது சகோதரியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால். நான் அவளுக்கு எழுதிய பதில்……...
நீ கேட்ட கேள்விக்கு எனக்கு கனக்க எதோ பதில் அளிக்க வேணும்போல பல எண்ணம் மனதுக்குள் வந்து நிற்கிறது ஆனால் எனக்கு அவ்வளவையும் தொகுக்க முடியல……….இருந்தும் எனது மன எண்ணங்களை முடிந்தளவு எழுத்தாக தர முயற்சி செய்கிறேன்.
நம்மளுடைய சமூகமிருக்கே அது பல சம்பிரதாயங்களை சரியான அர்த்தப்படுத்தி அதை கடைப்பிடிப்பது கிடையாது. ஏனோ இது சம்பிரதாயம் கடவுளுக்கு செய்வது கட்டாயம் செய்யவேண்டும் அல்லது கடைப்பிடிக்கவேண்டுமென்றே செய்வதுண்டு. நாங்கள் எமது சொந்தகாரர் ஒருதன் (அதுவும் ஒருவேளை எத்தனையோ கடல்மைல் தொலைவில் கூட இருக்கலாம்) செத்துவிட்டான் என்றால் அவன் செத்து 31 நாள் எமக்கு துடக்கு என்று சொல்லி கோயில் பக்கம் போகக்கூடாதென்று வலு கட்டுப்பாட்டோடு இருப்போம் அவன் செத்த ஆண்டில் வரும் தைப்பொங்கல் புதுவருடப்பிறப்பு மற்றும் தீபாவளி போன்றவற்றை புறக்கணிப்பதுபோல வெளியில் பானை வைத்து பொங்கமாட்டோம், புத்தாடை அணிந்து கலகலப்பாக திரியமாட்டோம். இதெல்லாம் எதுக்கப்பா என்று கேட்டால் அது சம்பிரதாயம் என்று சொல்வார்கள் அதிலும் கொஞ்சம் பகுத்தறிவுடன் சிலர் நாங்கள் இப்படி திரிஞ்சால் அந்த செத்தவனின் பிள்ளை குட்டியல் என்ன நினைக்கும் என்பார்கள்.
ஆனால் நம்முன்னோர்கள் மிகச்சரியாக இவற்றை வகுத்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறன். ஏனெனில் எமது சமூகத்தை நல்ல மனிதமுள்ள மக்களாக வழிப்படுத்தவேண்டுமென்ற நோக்கோடுதான் இதை வகுத்திருக்கிறார்கள். மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுக்கவேண்டும் அவர்களை வேதனைப்படுத்தக்கூடிய விதத்தில் நாம் நடந்துகொள்ளக்கூடாது என நல்ல விதத்தில் தங்கள் சமூகத்தை வழிப்படுத்தக்கூடியவாறு வகுத்திருகிறார்கள்.
நாங்கள் என்ன செய்கிறோம். சம்பிரதாயத்திற்காக 31 நாள் துடக்கு என்று கணக்காக கடைப்பிடித்துவிட்டு அடுத்த நாள் எமது களியாட்டங்களை தொடங்குகிறோம். அந்த செத்தவனுடைய நெருங்கியோரின் துக்கம் சிலவேளை 35 நாளிற்கு பிறகு குறையலாம் அல்லது அதற்கு முன்னமே 25 நாளிலும் குறையலாம். ஆனால் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை கணக்கா துடக்க முடிப்போம். இதுதான் எமது சமூகத்தின் இன்றைய வழமை. இதனால்தான் என்னவோ இதன் உண்மையான அர்த்தத்தை சிந்திக்காமலே பழகிவிட்டோம்.
இதே பழக்கம்தான் இங்கும் நடக்கிறது. அதுதான் வன்னியில் இன்று எம் உறவுகள் பெரும் துன்பத்தில் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை துன்பங்களையும் அந்த மக்கள் அனுபவிக்கும்போது நாம் புதுவருடத்தை புத்தாடை அணிந்து கலகலப்பாக கொண்டாடத்தான் வேணுமா என்று கேட்டால் எமது சமூகத்தில் ஒரு சாரார் சொல்கிறார்கள் அது வன்னியில் நடக்கிறது இங்கு நாங்கள் புத்தாடை அணிந்து கொண்டாடினால் யாருக்குதான் தெரியப்போகுதென்றும் மேலும் நாம் எமது வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்கவேண்டும் இழந்த காலம் திரும்பிவராது என்ற விளக்கம் வேற தருகிறார்கள். ஆனால் இதே சாரார் தான் எத்தனையோ கடல்மைல் தொலைவில் இயற்கையாக வயதாகி மரணித்த தனது சொந்தகாரன் ஒருவனுக்காக 31 நாள் சம்பிரதாயமாக துடக்கு கடைப்பிடிகிறார்கள். இப்படி இவர்கள் கடைப்பிடிக்கும்போது ஏன் இவர்கள் தங்கள் சந்தோஷமான காலம் கடந்துபோவதாக கருதுவதில்லை. ஆனால் எமக்காக தங்கள் சந்தோஷங்கள் அனைத்தையும் இழந்து போராடி மடிகின்ற அந்த போராளிகளுக்காக இவர்களால் புத்தாடை அணிவதை தவிர்த்து ஒரு சிறிய சந்தோஷத்தை இழக்க முடியாமல் இருக்கிறது. அந்த போராளிகளின் பெற்றோரின் துக்கத்தில் பங்கெடுக்க முடியாமல் உள்ளது. அல்லது அங்கிருக்கும் விடுதலைக்காக பாடுபட்ட அம்மக்களின் துக்கத்தை பகிரமுடியாமலுள்ளது. இதிலென்ன நியாயம் இருக்கிறது?
இப்படியெல்லாம் கேட்க போக இச்சாரார் வழமையான கேள்வியே கேட்டு தாங்கள் செய்வதை நியாயப்படுத்திற மாதிரி கதைப்பார்கள். அதுதான் நாங்கள் அங்கே போய் அந்த மக்களுடன் இருக்கலாம் அல்லது போராடி இருக்கலாம் அதைவிட்டுட்டு இஞ்சவந்து தமக்கு புத்தி சொல்கிறோம் என்பார்கள். தாங்கள் ஒரே முடிவில்தான் இருக்கிறோம் அங்குபோய் போராடவில்லை தமக்கு உந்த அரசியல் எல்லாம் பிடிக்காது தாம் எப்பவும் நடுனிலையானவர்கள் யாருக்கும் ஆதரவில்லை தாங்கள் யாருக்கும் தொந்தரவில்லாமல் எமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டுசெல்கிறோம் என்று பலவாறு நியாயம் கற்பிப்பார்கள். ஆனால் இச்சாரார் யாருக்கும் தொந்தரவில்லாமல் தமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டுசெல்ல காரணமானவர்களை வசதியாக மறந்துவிட்டிருப்பார்கள். இவர்களைப்போலத்தான் 83ம் ஆண்டு பலர் யாருக்கும் தொந்தரவில்லாமல் தமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டுசென்றிருப்பார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது.
இப்புத்தாண்டு எம் தமிழினத்திற்கு ஒரு விடிவு காலத்தை வெற்றியை தேடித்தரும் ஆண்டாக அமையவேண்டுமென வேண்டுகிறேன்.
நீ கேட்ட கேள்விக்கு எனக்கு கனக்க எதோ பதில் அளிக்க வேணும்போல பல எண்ணம் மனதுக்குள் வந்து நிற்கிறது ஆனால் எனக்கு அவ்வளவையும் தொகுக்க முடியல……….இருந்தும் எனது மன எண்ணங்களை முடிந்தளவு எழுத்தாக தர முயற்சி செய்கிறேன்.
நம்மளுடைய சமூகமிருக்கே அது பல சம்பிரதாயங்களை சரியான அர்த்தப்படுத்தி அதை கடைப்பிடிப்பது கிடையாது. ஏனோ இது சம்பிரதாயம் கடவுளுக்கு செய்வது கட்டாயம் செய்யவேண்டும் அல்லது கடைப்பிடிக்கவேண்டுமென்றே செய்வதுண்டு. நாங்கள் எமது சொந்தகாரர் ஒருதன் (அதுவும் ஒருவேளை எத்தனையோ கடல்மைல் தொலைவில் கூட இருக்கலாம்) செத்துவிட்டான் என்றால் அவன் செத்து 31 நாள் எமக்கு துடக்கு என்று சொல்லி கோயில் பக்கம் போகக்கூடாதென்று வலு கட்டுப்பாட்டோடு இருப்போம் அவன் செத்த ஆண்டில் வரும் தைப்பொங்கல் புதுவருடப்பிறப்பு மற்றும் தீபாவளி போன்றவற்றை புறக்கணிப்பதுபோல வெளியில் பானை வைத்து பொங்கமாட்டோம், புத்தாடை அணிந்து கலகலப்பாக திரியமாட்டோம். இதெல்லாம் எதுக்கப்பா என்று கேட்டால் அது சம்பிரதாயம் என்று சொல்வார்கள் அதிலும் கொஞ்சம் பகுத்தறிவுடன் சிலர் நாங்கள் இப்படி திரிஞ்சால் அந்த செத்தவனின் பிள்ளை குட்டியல் என்ன நினைக்கும் என்பார்கள்.
ஆனால் நம்முன்னோர்கள் மிகச்சரியாக இவற்றை வகுத்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறன். ஏனெனில் எமது சமூகத்தை நல்ல மனிதமுள்ள மக்களாக வழிப்படுத்தவேண்டுமென்ற நோக்கோடுதான் இதை வகுத்திருக்கிறார்கள். மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுக்கவேண்டும் அவர்களை வேதனைப்படுத்தக்கூடிய விதத்தில் நாம் நடந்துகொள்ளக்கூடாது என நல்ல விதத்தில் தங்கள் சமூகத்தை வழிப்படுத்தக்கூடியவாறு வகுத்திருகிறார்கள்.
நாங்கள் என்ன செய்கிறோம். சம்பிரதாயத்திற்காக 31 நாள் துடக்கு என்று கணக்காக கடைப்பிடித்துவிட்டு அடுத்த நாள் எமது களியாட்டங்களை தொடங்குகிறோம். அந்த செத்தவனுடைய நெருங்கியோரின் துக்கம் சிலவேளை 35 நாளிற்கு பிறகு குறையலாம் அல்லது அதற்கு முன்னமே 25 நாளிலும் குறையலாம். ஆனால் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை கணக்கா துடக்க முடிப்போம். இதுதான் எமது சமூகத்தின் இன்றைய வழமை. இதனால்தான் என்னவோ இதன் உண்மையான அர்த்தத்தை சிந்திக்காமலே பழகிவிட்டோம்.
இதே பழக்கம்தான் இங்கும் நடக்கிறது. அதுதான் வன்னியில் இன்று எம் உறவுகள் பெரும் துன்பத்தில் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை துன்பங்களையும் அந்த மக்கள் அனுபவிக்கும்போது நாம் புதுவருடத்தை புத்தாடை அணிந்து கலகலப்பாக கொண்டாடத்தான் வேணுமா என்று கேட்டால் எமது சமூகத்தில் ஒரு சாரார் சொல்கிறார்கள் அது வன்னியில் நடக்கிறது இங்கு நாங்கள் புத்தாடை அணிந்து கொண்டாடினால் யாருக்குதான் தெரியப்போகுதென்றும் மேலும் நாம் எமது வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்கவேண்டும் இழந்த காலம் திரும்பிவராது என்ற விளக்கம் வேற தருகிறார்கள். ஆனால் இதே சாரார் தான் எத்தனையோ கடல்மைல் தொலைவில் இயற்கையாக வயதாகி மரணித்த தனது சொந்தகாரன் ஒருவனுக்காக 31 நாள் சம்பிரதாயமாக துடக்கு கடைப்பிடிகிறார்கள். இப்படி இவர்கள் கடைப்பிடிக்கும்போது ஏன் இவர்கள் தங்கள் சந்தோஷமான காலம் கடந்துபோவதாக கருதுவதில்லை. ஆனால் எமக்காக தங்கள் சந்தோஷங்கள் அனைத்தையும் இழந்து போராடி மடிகின்ற அந்த போராளிகளுக்காக இவர்களால் புத்தாடை அணிவதை தவிர்த்து ஒரு சிறிய சந்தோஷத்தை இழக்க முடியாமல் இருக்கிறது. அந்த போராளிகளின் பெற்றோரின் துக்கத்தில் பங்கெடுக்க முடியாமல் உள்ளது. அல்லது அங்கிருக்கும் விடுதலைக்காக பாடுபட்ட அம்மக்களின் துக்கத்தை பகிரமுடியாமலுள்ளது. இதிலென்ன நியாயம் இருக்கிறது?
இப்படியெல்லாம் கேட்க போக இச்சாரார் வழமையான கேள்வியே கேட்டு தாங்கள் செய்வதை நியாயப்படுத்திற மாதிரி கதைப்பார்கள். அதுதான் நாங்கள் அங்கே போய் அந்த மக்களுடன் இருக்கலாம் அல்லது போராடி இருக்கலாம் அதைவிட்டுட்டு இஞ்சவந்து தமக்கு புத்தி சொல்கிறோம் என்பார்கள். தாங்கள் ஒரே முடிவில்தான் இருக்கிறோம் அங்குபோய் போராடவில்லை தமக்கு உந்த அரசியல் எல்லாம் பிடிக்காது தாம் எப்பவும் நடுனிலையானவர்கள் யாருக்கும் ஆதரவில்லை தாங்கள் யாருக்கும் தொந்தரவில்லாமல் எமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டுசெல்கிறோம் என்று பலவாறு நியாயம் கற்பிப்பார்கள். ஆனால் இச்சாரார் யாருக்கும் தொந்தரவில்லாமல் தமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டுசெல்ல காரணமானவர்களை வசதியாக மறந்துவிட்டிருப்பார்கள். இவர்களைப்போலத்தான் 83ம் ஆண்டு பலர் யாருக்கும் தொந்தரவில்லாமல் தமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டுசென்றிருப்பார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது.
இப்புத்தாண்டு எம் தமிழினத்திற்கு ஒரு விடிவு காலத்தை வெற்றியை தேடித்தரும் ஆண்டாக அமையவேண்டுமென வேண்டுகிறேன்.



0 மறுமொழிகள்:
Post a Comment