இன்று எதையோ இழந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு………..ஒரே சோகமான நிலை……….. எதற்கென்றால் எல்லாமே நேற்றைய ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தியின் விளைவே. அதுதான் நச்சுக்குண்டு ஏவி 250க்கு மேற்பட்ட போராளிகள் வீரச்சாவாம்……….ஏன் நியாயம் செத்துவிட்டதா இந்த உலகத்தில்…..அல்லது இதுவரைக்கும் அப்படியென்று ஒன்று இருந்ததே இல்லையா……….உண்மை வெல்லும் சத்தியம் ஜெயிக்கும் தர்மம்தான் இறுதியில் வெல்லுமென்பதெல்லாம் சும்மா பசப்பு வார்த்தைகளா? …………ஆனால் நாங்கள் இன்று இறுதி நிலையிலையே நிற்கிறோம் இன்னமும் தர்மம் வெல்லுமென்ற நம்பிக்கையுடன்……………..
இதற்கிடையில் என் நண்பர்களிருவரின் சம்பாஷனைகளால் மனம் இன்னும் வேதனைப்படுகிறது. என்ன அதுவென்றால்………….
நேற்று அந்த செய்திவந்ததிலிருந்து (உண்மையில் இச்செய்தி முந்தநாளே வந்துவிட்டது நான் நம்பவில்லை) தமிழனென்று மானமுள்ளவன் எவனுமே சோகநிலையில்தான் இருப்பான். விடிய எழும்பிய பின்னும் அந்த சோகம் மாறவில்லை, அந்நிலையில் இவர்கள் இருவரும் யாழ் செல்வதுபற்றி கதைத்து விட்டு எப்பொழுது அங்கு யாழ்தேவி(Train) விடுவார்கள் என்று அலசி ஆராய்கிறார்கள் எந்தவிதமான கூச்சமுமின்றி சுறனையற்ற மனிதர்கள் என்ன பிறப்புகளோ தெரியவில்லை. இதுக்குள்ள வேற என்னையும் இணைக்க எப்ப ஓடுமென்று கேள்வி நான் ஒன்றுமே பேசவில்லை. மவுனமாகவே இருந்துவிட்டேன் ஏனென்றால் இவர்களோடு கதைக்கபோனால் எனக்குதான் வேதனைகூடுமென்று முதல் நடந்த சம்பவமொன்று ஞாபமூட்டியது.
இதையே இவர்கள் வேறயொருநேரத்தில் கதைத்திருந்தால் நான் பெரிதாக எடுத்திருக்கமாட்டேன் இவையள் இப்பிடித்தான் என்று பேசமால் போய்கிட்டிருந்திருப்பேன் ஆனால் அவேக்கு இதுதானா நேரம் கிடைத்தது ஆராய்ச்சிக்கு………..பொறுக்க முடியாமல் போய்விட்டது. இதுக்குள்ள ஒருவருக்கு நேற்று நடந்த சம்பவம் தெரிந்திருக்குமோ என்பதைக்கூட உறுதியா சொல்லமுடியாது. மற்றவருக்கு எல்லா விஷயும் தெரியும். ஏன் இவர்களுக்கு உணர்வென்பதே இல்லையா? இவர்களேன் இப்படி இருக்கிறார்கள் என பலதடவை என்னை நானே கேட்பதுண்டு. இதைப்பற்றி பார்க்க முன்னாடி முதல் நடந்த சம்பவத்தையும் பார்த்துவிட்டு வருவோம்
நாங்கள் வழமையாக வேலைக்கு புறப்பட முன் காலைச்சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டு TV news பார்த்து அதைப்பற்றி விமர்சித்துவிட்டுதான் செல்வது. இப்படித்தான் ஒருநாள் news பார்த்துகொண்டிருக்க காங்கிரஸ் கட்சி இலங்கைக்கு மருந்துப்பொருட்கள் அனுப்பியதாக ஒரு செய்தி. நானும் அந்த செய்தியைபார்த்தவுடன் எனது விமர்சனம் இதெங்க மக்களுக்கு எல்லாம் இராணுவத்துக்குத்தான் என்றேன். உடனே எனது அதே நண்பர்களில் விபரமான நண்பர்
"நீங்க எதை செய்தாலும் இப்படி சொல்லிக்கொண்டிருங்கோ"
நான் "உண்மையில் உதவி தேவைப்படுவது வன்னிக்குள் உள்ளவர்களுக்கே, வெளியில் உள்ளவர்களுக்கு இவ்வளவு செலவு செய்கிற இலங்கை அரசுக்கு வசதியில்லையா?"
உடனே அந்த விபரமற்ற மற்ற நண்பர் " வவுனியா ஆஸ்பத்திரியில் பனடோல் இல்லையாம்" என்றார்
எனக்கு சிரிப்பதோ அழுவதோ என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இவருக்கு அவற்றை பிறந்த கிராமம் மற்றும் வவுனியா கொழும்பு இதைத்தவிர பிற இடம் எங்கு வரைபடத்தில் இருக்கென்றுகூட தெரியாது. தமிழர் போராட்டம் எதற்காக என்றுகூட தெரியாது. ஆனால் இத்தனைக்கும் இவர் நாட்டைவிட்டு வெளியில்வந்து ஒரு வருடம்கூட இல்லை. எங்கதான் இருந்தாரோ தெரியாது. இவருக்கு நடந்ததென்னவென்றால் இவருடைய உறவினர் சிலர் அங்கு வவுனியாவில் இருக்கிறார்கள் போல அவே அங்கு எங்கோ சென்ற போதே அல்லது ரோட்டில கதைச்சதை இந்த புண்ணியவானிடம் சொல்லியிருக்கிறார்கள் அதை இவர் எங்க கொண்டுவந்து பாவிச்சார் என்று பாருங்கள். சரி அவரைப்பற்றிக்கதைப்பதில் பிரயோசனமில்லை. விடுவம்
அவற்றை பதிலுக்கு நான் "சரி அரசால்தான் முடியவில்லையென்றால் வேற எத்தனை நிறுவனமிருக்கு உதவ" என்றேன்
உடனே அந்த விபரமானவர் "அப்பிடியென்றால் அந்த சனத்தை விடவேண்டியது தானே" என்றார்
எனக்கு பத்திக்கொண்டுவந்தது. அதில் மேலதிகமாக அவருடன் கதைவளர்க்க விரும்பவில்லை வீணா கதைப்பதால் பிரயோசனமில்லை என்பதால்.
இவரென்ன விளங்காத மாதிரி உள்ளரோ இல்லை தான் சொல்லும்கருத்துதான் சரியென்று சொல்வதற்காக சொல்கிறாரோ என்று விளங்கவில்லை. அவருடைய விபரமறியும் திறனைப்பார்த்தால் விளங்காமலிருக்க வாய்ப்பில்லை.
அரசு சொல்வதை நம்புகின்ற அளவுக்கு 1% கூட தமிழ் ஊடகங்கள் சொல்வதை நம்புகிறார்களில்லையே. ஒரு வெளிநாட்டவன் என்றால் கூட பரவாயில்லை அந்த மக்களுடன் வாழ்ந்த ஒருவன் எப்படி நம்பமறுக்கிறான். அந்த மக்களில் எத்தனை பேர் வெளியில் வர விரும்பாமல் இருக்கிறார்கள் என்று இவர்கள் என்ன அறியாதத எத்தனை பேர் விடுதலைக்காக உழைத்தவர்கள் உள்ளார்கள் இந்த மக்களுக்கு என்ன பதில் இவர் போன்றவர்கள் வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் பதிலில்லை சும்மா எழுந்தமானத்துக்கு கதைக்கிறார்கள். என்ன இந்த மக்கள் பாவம் செய்தவர்கள் என்று இவர்கள் கருதுகிறார்களா? அல்லது போராளிகளின் தாய் தந்தை குடும்பம் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதுகிறார்களா? என்னதான் கருதுகிறார்கள் அதுக்குகூட இவர்களிடம் விளக்கமில்லை. இந்த நண்பரைப்போல பலர் எம்மத்தியில் இருக்கிறார்கள் எம் சகோதரராக நண்பராக உறவினராக தயவுசெய்து மாற்றுங்கள் உங்களை………உங்கள் மனச்சாட்சியை தொட்டு ஒருமுறை யோசியிங்கள்.
இப்படியானவர்கள உடனே கேட்பார்கள் எங்களை பார்த்து "நீ இவ்வளவு கதைக்கிறியே போய் போராடவேண்டியதுதானே" என்று. உண்மைதான் நாங்கள் போரடவில்லைதான் இந்த விடுதலைக்காக risk எடுத்து எதுவும் செய்துவிடவில்லைதான் உண்மையை சொல்லப்போனால் எமக்கும் மனம் உறுத்திக்கொண்டேதான் இருக்கிற்து எதுவுமே செய்யவில்லையே என்று ஆனாலு வாழும் ஆசையை விடமுடியவில்லையே…..அம்மா அப்பா சகோதரரை பிரியமுடியவில்லையே……..இதுவே எனக்குள் பலவாறான போரட்டங்களை நடத்துவதுண்டு…….நான் செய்வது பிழையென்றுகூட தெரிகிறது. இருந்தும் அந்த பிழையை விடுகிறேன். அதற்காக நான் செய்யும்பிழையை சரிப்படுத்த மனச்சாட்சிப்படிதான் நடந்துகொள்கிறேன் என பொய்மையாய் எனக்குள் திருப்தியை ஏற்படுத்துவதற்காக போராடுகின்ற உத்தமர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதா? எம்மால் முடியாது என்பதை அவர்கள் செய்யும்போது உண்மையில் அவர்களின் தியாகத்தின் அதிஉன்னதம் உங்களுக்கு புரியவில்லையா? மனச்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள் அவர்கள் எத்தனை மகத்தான மனிதர்கள் என்று. அவர்களென்ன தன் குடும்பம் வாழவேண்டுமென்று மட்டுமா போராடுகிறார்கள். ஒரு முறையே வாழக்கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை எதற்காக தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார்கள்? அவர்களுக்கு உங்களைப்போல அல்லது எங்களைப்போல வாழ ஆசையில்லையா? உயிரோடிருக்க விருப்பமில்லையா? ஒரு முறை சிந்தித்துபார்த்தீர்கள் என்றால் புரியும். தயவுசெய்து அவர்களின் தியாகத்திற்கு மதிப்பு கொடுங்கள்.
எனது இந்த இரு நண்பர்களின் வடிவில் ஒரு மக்கள் சமூகத்தைதான் பார்க்கிறேன். தயவுசெய்து இப்படி இருக்காதீர்கள் மாறுங்கள்………..
இதற்கிடையில் என் நண்பர்களிருவரின் சம்பாஷனைகளால் மனம் இன்னும் வேதனைப்படுகிறது. என்ன அதுவென்றால்………….
நேற்று அந்த செய்திவந்ததிலிருந்து (உண்மையில் இச்செய்தி முந்தநாளே வந்துவிட்டது நான் நம்பவில்லை) தமிழனென்று மானமுள்ளவன் எவனுமே சோகநிலையில்தான் இருப்பான். விடிய எழும்பிய பின்னும் அந்த சோகம் மாறவில்லை, அந்நிலையில் இவர்கள் இருவரும் யாழ் செல்வதுபற்றி கதைத்து விட்டு எப்பொழுது அங்கு யாழ்தேவி(Train) விடுவார்கள் என்று அலசி ஆராய்கிறார்கள் எந்தவிதமான கூச்சமுமின்றி சுறனையற்ற மனிதர்கள் என்ன பிறப்புகளோ தெரியவில்லை. இதுக்குள்ள வேற என்னையும் இணைக்க எப்ப ஓடுமென்று கேள்வி நான் ஒன்றுமே பேசவில்லை. மவுனமாகவே இருந்துவிட்டேன் ஏனென்றால் இவர்களோடு கதைக்கபோனால் எனக்குதான் வேதனைகூடுமென்று முதல் நடந்த சம்பவமொன்று ஞாபமூட்டியது.
இதையே இவர்கள் வேறயொருநேரத்தில் கதைத்திருந்தால் நான் பெரிதாக எடுத்திருக்கமாட்டேன் இவையள் இப்பிடித்தான் என்று பேசமால் போய்கிட்டிருந்திருப்பேன் ஆனால் அவேக்கு இதுதானா நேரம் கிடைத்தது ஆராய்ச்சிக்கு………..பொறுக்க முடியாமல் போய்விட்டது. இதுக்குள்ள ஒருவருக்கு நேற்று நடந்த சம்பவம் தெரிந்திருக்குமோ என்பதைக்கூட உறுதியா சொல்லமுடியாது. மற்றவருக்கு எல்லா விஷயும் தெரியும். ஏன் இவர்களுக்கு உணர்வென்பதே இல்லையா? இவர்களேன் இப்படி இருக்கிறார்கள் என பலதடவை என்னை நானே கேட்பதுண்டு. இதைப்பற்றி பார்க்க முன்னாடி முதல் நடந்த சம்பவத்தையும் பார்த்துவிட்டு வருவோம்
நாங்கள் வழமையாக வேலைக்கு புறப்பட முன் காலைச்சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டு TV news பார்த்து அதைப்பற்றி விமர்சித்துவிட்டுதான் செல்வது. இப்படித்தான் ஒருநாள் news பார்த்துகொண்டிருக்க காங்கிரஸ் கட்சி இலங்கைக்கு மருந்துப்பொருட்கள் அனுப்பியதாக ஒரு செய்தி. நானும் அந்த செய்தியைபார்த்தவுடன் எனது விமர்சனம் இதெங்க மக்களுக்கு எல்லாம் இராணுவத்துக்குத்தான் என்றேன். உடனே எனது அதே நண்பர்களில் விபரமான நண்பர்
"நீங்க எதை செய்தாலும் இப்படி சொல்லிக்கொண்டிருங்கோ"
நான் "உண்மையில் உதவி தேவைப்படுவது வன்னிக்குள் உள்ளவர்களுக்கே, வெளியில் உள்ளவர்களுக்கு இவ்வளவு செலவு செய்கிற இலங்கை அரசுக்கு வசதியில்லையா?"
உடனே அந்த விபரமற்ற மற்ற நண்பர் " வவுனியா ஆஸ்பத்திரியில் பனடோல் இல்லையாம்" என்றார்
எனக்கு சிரிப்பதோ அழுவதோ என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இவருக்கு அவற்றை பிறந்த கிராமம் மற்றும் வவுனியா கொழும்பு இதைத்தவிர பிற இடம் எங்கு வரைபடத்தில் இருக்கென்றுகூட தெரியாது. தமிழர் போராட்டம் எதற்காக என்றுகூட தெரியாது. ஆனால் இத்தனைக்கும் இவர் நாட்டைவிட்டு வெளியில்வந்து ஒரு வருடம்கூட இல்லை. எங்கதான் இருந்தாரோ தெரியாது. இவருக்கு நடந்ததென்னவென்றால் இவருடைய உறவினர் சிலர் அங்கு வவுனியாவில் இருக்கிறார்கள் போல அவே அங்கு எங்கோ சென்ற போதே அல்லது ரோட்டில கதைச்சதை இந்த புண்ணியவானிடம் சொல்லியிருக்கிறார்கள் அதை இவர் எங்க கொண்டுவந்து பாவிச்சார் என்று பாருங்கள். சரி அவரைப்பற்றிக்கதைப்பதில் பிரயோசனமில்லை. விடுவம்
அவற்றை பதிலுக்கு நான் "சரி அரசால்தான் முடியவில்லையென்றால் வேற எத்தனை நிறுவனமிருக்கு உதவ" என்றேன்
உடனே அந்த விபரமானவர் "அப்பிடியென்றால் அந்த சனத்தை விடவேண்டியது தானே" என்றார்
எனக்கு பத்திக்கொண்டுவந்தது. அதில் மேலதிகமாக அவருடன் கதைவளர்க்க விரும்பவில்லை வீணா கதைப்பதால் பிரயோசனமில்லை என்பதால்.
இவரென்ன விளங்காத மாதிரி உள்ளரோ இல்லை தான் சொல்லும்கருத்துதான் சரியென்று சொல்வதற்காக சொல்கிறாரோ என்று விளங்கவில்லை. அவருடைய விபரமறியும் திறனைப்பார்த்தால் விளங்காமலிருக்க வாய்ப்பில்லை.
அரசு சொல்வதை நம்புகின்ற அளவுக்கு 1% கூட தமிழ் ஊடகங்கள் சொல்வதை நம்புகிறார்களில்லையே. ஒரு வெளிநாட்டவன் என்றால் கூட பரவாயில்லை அந்த மக்களுடன் வாழ்ந்த ஒருவன் எப்படி நம்பமறுக்கிறான். அந்த மக்களில் எத்தனை பேர் வெளியில் வர விரும்பாமல் இருக்கிறார்கள் என்று இவர்கள் என்ன அறியாதத எத்தனை பேர் விடுதலைக்காக உழைத்தவர்கள் உள்ளார்கள் இந்த மக்களுக்கு என்ன பதில் இவர் போன்றவர்கள் வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் பதிலில்லை சும்மா எழுந்தமானத்துக்கு கதைக்கிறார்கள். என்ன இந்த மக்கள் பாவம் செய்தவர்கள் என்று இவர்கள் கருதுகிறார்களா? அல்லது போராளிகளின் தாய் தந்தை குடும்பம் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதுகிறார்களா? என்னதான் கருதுகிறார்கள் அதுக்குகூட இவர்களிடம் விளக்கமில்லை. இந்த நண்பரைப்போல பலர் எம்மத்தியில் இருக்கிறார்கள் எம் சகோதரராக நண்பராக உறவினராக தயவுசெய்து மாற்றுங்கள் உங்களை………உங்கள் மனச்சாட்சியை தொட்டு ஒருமுறை யோசியிங்கள்.
இப்படியானவர்கள உடனே கேட்பார்கள் எங்களை பார்த்து "நீ இவ்வளவு கதைக்கிறியே போய் போராடவேண்டியதுதானே" என்று. உண்மைதான் நாங்கள் போரடவில்லைதான் இந்த விடுதலைக்காக risk எடுத்து எதுவும் செய்துவிடவில்லைதான் உண்மையை சொல்லப்போனால் எமக்கும் மனம் உறுத்திக்கொண்டேதான் இருக்கிற்து எதுவுமே செய்யவில்லையே என்று ஆனாலு வாழும் ஆசையை விடமுடியவில்லையே…..அம்மா அப்பா சகோதரரை பிரியமுடியவில்லையே……..இதுவே எனக்குள் பலவாறான போரட்டங்களை நடத்துவதுண்டு…….நான் செய்வது பிழையென்றுகூட தெரிகிறது. இருந்தும் அந்த பிழையை விடுகிறேன். அதற்காக நான் செய்யும்பிழையை சரிப்படுத்த மனச்சாட்சிப்படிதான் நடந்துகொள்கிறேன் என பொய்மையாய் எனக்குள் திருப்தியை ஏற்படுத்துவதற்காக போராடுகின்ற உத்தமர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதா? எம்மால் முடியாது என்பதை அவர்கள் செய்யும்போது உண்மையில் அவர்களின் தியாகத்தின் அதிஉன்னதம் உங்களுக்கு புரியவில்லையா? மனச்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள் அவர்கள் எத்தனை மகத்தான மனிதர்கள் என்று. அவர்களென்ன தன் குடும்பம் வாழவேண்டுமென்று மட்டுமா போராடுகிறார்கள். ஒரு முறையே வாழக்கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை எதற்காக தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார்கள்? அவர்களுக்கு உங்களைப்போல அல்லது எங்களைப்போல வாழ ஆசையில்லையா? உயிரோடிருக்க விருப்பமில்லையா? ஒரு முறை சிந்தித்துபார்த்தீர்கள் என்றால் புரியும். தயவுசெய்து அவர்களின் தியாகத்திற்கு மதிப்பு கொடுங்கள்.
எனது இந்த இரு நண்பர்களின் வடிவில் ஒரு மக்கள் சமூகத்தைதான் பார்க்கிறேன். தயவுசெய்து இப்படி இருக்காதீர்கள் மாறுங்கள்………..



4 மறுமொழிகள்:
நீதி நியாயம் தர்மம் என்ற எந்த புடலங்காயும் உலகில் இல்லை
அப்பிடித்தான் எனக்கும் தோன்றுது இருந்தாலும் ஒரு சிறு நம்பிக்கை
மனங் கலங்காது இயன்றவரை உறுதியாகச் செயற்படுக!
விடுதலைப் போராளி தோற்றதாக வரலாறு கிடையாது.
'word verification'-ஐ நீக்குக.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
நீக்கியாச்சு
Post a Comment